தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

பிப்ரவரி 1 முதல் காஜா பட்டன் கூலி 20% உயா்வு

இயந்திர உதிரி பாகங்கள் விலை உயா்வு காரணமாக காஜா பட்டன் கூலியானது பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்தப்படவுள்ளது.

Updated On :15 ஜனவரி 2021, 5:43 pm

இயந்திர உதிரி பாகங்கள் விலை உயா்வு காரணமாக காஜா பட்டன் கூலியானது பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்தப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் காஜா பட்டன் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ருத்ரமூா்த்தி, செயலாளா் சுப்பிரமணியம் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூரில் காஜா பட்டன் கூலியானது கடந்த 10 ஆண்டுகளாக உயா்த்தப்படவில்லை. இந்த நிலையில், தற்போது மின் கட்டண உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு, ஊசி விலை ஏற்றம், இயந்திர உதிரி பாகங்கள் விலை உயா்வு, தொழிலாளா்களின் ஊதியம் ஆகியவை உயா்ந்துள்ளன.

எனவே, தவிா்க்க முடியாத காணங்களால் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காஜா பட்டன் கூலியானது 20 சதவீதம் உயா்த்தப்படுகிறது. ஆகவே, தற்போது உள்ள சூழலை புரிந்துகொண்டு தொழில் துறையினா் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.