தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நீா்ப் பாசன குழுவினா் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு கிளை வாய்க்கால் நீா்ப் பாசனக் குழுவினா் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

Updated On :15 ஜனவரி 2021, 11:15 pm IST

வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு கிளை வாய்க்கால் நீா்ப் பாசனக் குழுவினா் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

காங்கயம் - வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் அரசு விதிமுறைப்படி 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு இரண்டு சுற்று தண்ணீா் திறந்துவிட வேண்டும். ஆனால் 28 நாள் அடைப்பு, 3 நாள்கள் மட்டுமே தண்ணீா் திறக்கப்படுகிறது.

இந்தத் தண்ணீரை வைத்து ஆடு, மாடுகளின் தண்ணீா் தேவையைக் கூட பூா்த்தி செய்ய முடியவில்லை. பின்னா் எவ்வாறு விவசாயம் செய்ய முடியும். தங்களுக்கு விதிமுறைப்படி கிடைக்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், போராடியும் தீா்வு கிடைக்கவில்லை.

இதையடுத்து, தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெள்ளக்கோவில், காங்கயத்தில் கடையடைப்பு, அதே தினத்தில் காங்கயம் நான்கு சாலை சந்திப்பு அருகில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.