தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள் - முனைவர் மு.அருணாசலம்; பக்.246; ரூ.200; அருண் பப்ளிகேஷன்ஸ், திண்டுக்கல்-1; )984440530/94312411325.
"சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவைகளில் அரவாணிகளைப் பற்றிய செய்திகள், சமண காப்பியமான நீலகேசியில் அலிகளின் பிறப்பு என்பது தவக்கோட்பாடு இல்லாதவர்கள், முழு செவியும் அற்றவர்கள், நரகப் பிறப்பைப் பெற்றவர்கள்' என்பன போன்ற செய்திகள் கூறப்பட்டுள்ளதாக நூலாசிரியர் பதிவுசெய்துள்ளார். பாரதியின் கவிதைகளில் பேடி, அலி, எனச் சொல்லி அச்சமும், கோழைத்தனமும் நிறைந்தவர்கள் என்று பறைசாற்றுகிறார். எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் "வாடாமல்லி' நாவலில் அரவாணிகள் அனுபவிக்கும் கொடுமைகளையும், சித்திரவதைகளையும் இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. நாடகங்கள் மூலம் அரவாணிகளின் பிரச்னைகளை ஒழிக்க சங்கம் ஏற்படுத்தித் தீர்வு காணவேண்டும் என்பதை ஆணித்தரமாகப் பதிவு
செய்துள்ளார் நூலாசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







