மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மண் கசந்தால் மானுடமே அழியும்

மண் கசந்தால் மானுடமே அழியும் - பி.தயாளன்; பக்.100; ரூ.60; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; )044 - 2848 2441.

News image
Updated On :17 மார்ச் 2013, 5:51 pm

பாலசுப்பிரமனியம்

மண் கசந்தால் மானுடமே அழியும் - பி.தயாளன்; பக்.100; ரூ.60; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; )044 - 2848 2441.

சுற்றுச்சூழலை சீரழித்தால் மனித வாழ்க்கை சீரழிந்துவிடும் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். நீர், காற்று ஆகியவை கெட்டால் மனிதனுக்கு என்ன பிரச்னைகள் வரும்? திடக் கழிவு மாசுகளால் நமக்கு நேரும் தீங்குகள் எவை? பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச் சூழல் எவ்வாறு கெட்டுப் போகிறது? புவி வெப்பமடைதலுக்கான காரணங்கள் எவை? அதிக ஓலியால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள், அதிக நேரம் செல்போனில் பேசினால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை பற்றியெல்லாம் மிக எளிமையாக இந்நூல் விளக்குகிறது. மின்னணுப் பொருட்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்ட நிலையில், மின்னணுப் பொருட்களின் கழிவுகளால் சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்புகளைப் படிக்கும்போது மனம் கலக்கமடைகிறது. ""அணு உலைகள் பாதுகாப்பானவையே. ஆனால் பூகம்பம், சுனாமி தாக்குதல் முதலிய இயற்கை இடர்பாடுகளைத் தாங்கும் அளவுக்குப் பாதுகாப்பானவையாக உள்ளனவா?'' என்று நூலாசிரியர் கேள்வி எழுப்புவது சிந்திக்க வைக்கிறது. சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் மனித குலம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மனிதகுலம் அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.