தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நரேந்திர மோடி - நேர்மையும், நிர்வாகத் திறமையும்

நரேந்திர மோடி - நேர்மையும், நிர்வாகத் திறமையும் - சந்திரமெளலி; பக். 168; ரூ.150; அல்லயன்ஸ் கம்பெனி, ப.எண் 244, பு.எண் 64, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4.

News image
Updated On :20 ஏப்ரல் 2014, 7:18 pm

சந்திரமெளலி

நரேந்திர மோடி - நேர்மையும், நிர்வாகத் திறமையும் - சந்திரமெளலி; பக். 168; ரூ.150; அல்லயன்ஸ் கம்பெனி, ப.எண் 244, பு.எண் 64, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4.

மிக மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, கட்சிக்குள்ளும், வெளியிலும் எதிர்ப்புகளைச் சமாளித்து, சாதனையாளராக மாறியது எப்படி என்பதை விவரிக்கும் நூல். காலத்தின் கட்டாயத்தால் குஜராத்தில் மோடி முதல்வராகப் பதவியேற்ற சிறிது காலத்துக்குள்ளாகவே நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரமும் மாறாத வடுக்களாகத் திகழ்கின்றன. கலவரத்தின்போதும், அதற்கு முன்னர் 2001-இல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளைச் சீர் செய்யவும், அதன் பின்னர் குஜராத்தின் வளர்ச்சிக்கு நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளும் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதன் முதலாக பேரிடர் மேலாண்மை நிறுவனம், தடய அறிவியல் பல்கலைக்கழகம், பெட்ரோலிய பல்கலைக்கழகம், காவல்துறையினருக்காக ரக்ஷா சக்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றை உருவாக்கியது, விவசாயத்துக்கு இலவசமாக இல்லாமல் கட்டணத்துடன் தடையில்லா மின்சாரம் வழங்கியது, விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கியது, சொட்டு நீர்ப் பாசனம், பருத்தி உற்பத்தியில் சாதனை படைத்தது, 99 சதவீத கிராமங்களுக்கு தரமான சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் சுமார் 300 அணைகளும், 30 ஆயிரம் தடுப்பணைகளும் கட்டியதால் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு கண்டது, மாநிலத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை 69 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக உயர்த்தியது, படிப்பைத் தொடராமல் இடைநிற்றலை 21 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைத்தது, கர்ப்பிணிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சூரிய ஒளி மின்சார உற்பத்தி போன்ற சாதனைகளும், இதற்காக ஐ.நா.சபை, மத்திய அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் 200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் விருது வழங்கியதும் இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மோடியின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களும் படிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.