திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பொலிக பொலிக!

பொலிக பொலிக! - பா.ராகவன்; பக்.464; ரூ.325; கிழக்கு பதிப்பகம், சென்னை 14; )044 -42009603.

News image
Updated On :2 ஜூலை 2017, 6:18 pm

பொலிக பொலிக! - பா.ராகவன்; பக்.464; ரூ.325; கிழக்கு பதிப்பகம், சென்னை 14; )044 -42009603.
"பொலிக பொலிக பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம்' என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. அதினின்றும் கிடைத்தது இந்தப் புத்தகத்தின் பெயர். ஸ்ரீவைஷ்ணவத்தை ஆயிரமாண்டுகளுக்கு முன் வெற்றிகரமாக நிறுவிய ராமானுஜரின் ஜீவசரிதத்தை விவரிக்கிறது நூல். பாரத ஆன்மிக
மரபின் ஜெயக்கொடியை நாட்டிய மனித நேய வள்ளலின் வாழ்க்கைக் கதை, சம்பவ வடிவில் அமைந்திருப்பது இதன் சிறப்பு. எனினும் கற்பனை கட்டற்றுப் போகவிடாமல், வரலாற்று விவரங்களின் அடிப்படையில் இதனைப் படைத்திருக்கிறார் பா.ராகவன். காட்சி வர்ணனைகள் நம்மை அந்தக் காலகட்டத்துக்குக் கொண்டு செல்கிறது.
இந்தப் புத்தகத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்- ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவங்களை எளிய நடையில் இன்றைக்கு நம் கண் முன்னே கொண்டு வருகிறார்.
சித்தாந்த தர்க்கங்களையும் அவர் எளிமையாகக் கையாள்கிறார். ஆன்மிகத்தில் நாட்டமுள்ள மூத்த வயதினர் மட்டுமின்றி, எல்லா வயதினரும் சுகமாகப் படித்து இன்புறலாம், பயன் பெறலாம்.
இந்தப் புத்தகத்தை இயற்ற ராமானுஜரின் வரலாற்றைக் கூறும் பல முன்னோடி சரித்திர நூல்களையும் ஆவணங்களையும் நூலாசிரியர் பா.ராகவன் ஆராய்ந்து பயன்படுத்தியிருக்கிறார். இருந்தபோதிலும், வரலாற்றுக் கட்டுரை வடிவத்தின் இறுக்கம் இல்லாமல், ஒரு படைப்பு இலக்கிய நூலைப் போல வடித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.