கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, பெரியநாயகி அம்மன், பெரியாவுடையார் திருக்கோயில்கள்- ஒரு பண்பாட்டு ஆய்வு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, பெரியநாயகி அம்மன், பெரியாவுடையார் திருக்கோயில்கள்- ஒரு பண்பாட்டு ஆய்வு - பி.ஆர்.நரசிம்ஹன்; பக்.384; ரூ. 350; விஷ்ணு பதிப்பகம்

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:36 am

DIN

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, பெரியநாயகி அம்மன், பெரியாவுடையார் திருக்கோயில்கள்- ஒரு பண்பாட்டு ஆய்வு - பி.ஆர்.நரசிம்ஹன்; பக்.384; ரூ. 350; விஷ்ணு பதிப்பகம், 10 - சி, கிழக்குத் தெரு, அனுப்பானடி, மதுரை -625009.
 தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க கோயில்கள் ஏராளமாக உண்டு என்றாலும் கூட, தமிழரின் முதல் நிலத்து முதல் கடவுளாக ஏற்று வணங்கப்படும் முருகனுக்குரிய தனிச்சிறப்பு மிக்க கோயில்கள் ஆறு.
 "ஆறுபடை வீடு' என்று அழைக்கப்படும் இவற்றில் மூன்றாவது படைவீடான பழனி எனப்படும் திருவாவினன்குடி தண்டாயுதபாணி சுவாமி கோயில், புராண அடிப்படையில் அக்கோயிலோடு தொடர்புடைய வேறு மூன்று கோயில்கள் ஆகியவை குறித்த அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டு இந்நூலாக உருவாகியிருக்கிறது.
 இந்த நான்கு திருக்கோயில்களின் தோற்றம், வளர்ச்சி, புராணங்கள், விழா மரபுகள், சமுதாயப் பணிகள், நிர்வாக முறைகள் ஆகியவை இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் தனது ஆய்வுக்கு அடிப்படையாக கல்வெட்டுகள், செப்பு பட்டய செய்திகளைக் கொண்டிருப்பதால், தரவுகள் ஐயத்திற்கு இடமின்றி அமைந்துள்ளன.
 பல்வேறு மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் பழனி எவ்வாறு சிறப்புற்று விளங்கியது என்பதை இந்நூல் வழியே நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.
 முருக வழிபாடு தோன்றியவிதம், வளர்ந்த முறை, புராணங்களிலும், இதிகாசங்களிலும் , காப்பியங்களிலும் , இலக்கியங்களிலும், வரலாறுகளிலும் முருகன் குறித்து சுட்டப்படும் இடங்கள், முருகன் என்னும் பெயர் குறித்த ஆய்வு இவையெல்லாம் ஆசிரியரின் புலமையையும் உழைப்பையும் புலப்படுத்துகின்றன.
 பழனி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்கள் மட்டுமல்லாது, அன்றாட வழிபாட்டு முறைகள் குறித்தும் விரிவாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
 நூலின் இறுதிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்களும், புகைப்படங்களும் நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்கு வலு சேர்க்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.