திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விஜயபாரதம்

சமீப ஆண்டுகளில் ஆன்மிக மகான்கள், சமயப் பெரியவர்கள் அல்லது ஜோதிடர்களிடம் சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி,  குலதெய்வக் கோயிலுக்கு கடைசியாக எப்போது சென்றீர்கள் என்பதுதான்.

News image
Updated On :25 அக்டோபர் 2022, 2:22 pm

DIN

விஜயபாரதம் - பக். 390; ரூ. 100.

சமீப ஆண்டுகளில் ஆன்மிக மகான்கள், சமயப் பெரியவர்கள் அல்லது ஜோதிடர்களிடம் சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி,  குலதெய்வக் கோயிலுக்கு கடைசியாக எப்போது சென்றீர்கள் என்பதுதான்.  தொடர் பிரச்னைகளுக்கு தீர்வு அங்குதான் இருக்கிறது என்பதே அந்தக் கேள்விக்கு அர்த்தம். அந்தச் சிந்தனையை மக்கள் மனங்களில் இன்னும் மேலோங்கச் செய்திருக்கிறது இந்த மலர். 

அகரமாங்குடி தென்னாயிர அய்யனார், காயாமொழி குதிரைமொழித்தேரி கற்குவேல் அய்யனார், கருப்பராயர், பச்சையம்மன், சொரிமுத்து அய்யனார், சிறுவாபுரி முருகன், திருக்கடிகை ஸ்ரீயோக நரசிம்மர், மனப்பாக்கம் சப்த கன்னியர்கள் என்று வரிசைப்படுத்திக் கொண்டே செல்லக்கூடிய அளவில் நம்மை காக்கும் எண்ணற்ற குல தெய்வங்கள், கிராம தேவதைகள் அருள்பாலிக்கும் தலங்கள் குறித்த கட்டுரைகள் உள்ளன.

புலம்பெயர்ந்ததால் மறந்துபோன குலதெய்வங்களை அறியவும் சில வழிமுறைகள் இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது மலர். குலதெய்வ வழிபாடு என்பது விஞ்ஞானத்துடன் ஒத்துப்போனது, அறிவியல் உண்மைகளும் இருக்கின்றன என்பதற்கு மலரில் விளக்கம் உண்டு.

சுக, துக்கங்களின்போது நாம் சரண் அடைவது குலதெய்வத்தையே. அத்தகைய குலதெய்வங்கள் பலவித பெயர்களில், முதன்மை தெய்வங்களாக, பரிவார தேவதைகளாக என பல வடிவங்களில் காட்சி அளிக்கின்றன. அத்தகைய தெய்வங்களில் ஒருசில படங்கள் மலரின் அட்டையை அலங்கரிக்கின்றன. நமது குலம் விளங்க, நாம் கொண்டாடவேண்டிய குலதெய்வங்களின் அருளை நமது அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை உணர வைத்திருக்கிறது இந்த மலர்.

லேடீஸ் ஸ்பெஷல் -  பக்.224; ரூ.200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.