சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

ரகுநாதன் நாவல்கள் - தொகுப்பும் பதிப்பும் பேரா.சு.சண்முகசுந்தரம்; பக்.684; ரூ.700; காவ்யா பதிப்பகம், சென்னை-24; ✆ 044- 2372 6882.

பத்திரிகையாளர், விமர்சகர், கவிஞர், நூலாசிரியர், பொதுவுடமைவாதி, இலக்கிய பெருமன்றத்தை உருவாக்கியவர் என பன்முகத் தன்மை கொண்டவர் தொ.மு.சி.ரகுநாதன். அவர் எழுதிய  நான்கு நாவல்களின் தொகுப்பு இந்த நூல்.

கன்னிகா (1950) நவீனத்துவத்தின் குரலை எதிரொலிக்கிறது. வாசிக்க அலுப்புத் தட்டாத எழுத்து.  வெளிவந்த காலத்தில் அதிர்வை ஏற்படுத்தியது.

முதலிரவு (1949) நாவல் காமம் குறித்து பேசப்பட்டதால் விமர்சனத்துக்கு உள்ளாகி தடை செய்யப்பட்டதும் உண்டு. எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தப்பட்ட நாவல் என்ற நிலையில் கைவிடப்பட்டது.  புதுமைப்பித்தன் மீதியையும் எழுதச் சொன்னதன்பேரில் முழுவதும் ரகுநாதன் எழுதினார். 'மனதோடு கிடக்க வேண்டிய விஷயங்களை இப்படி எழுதலாமா?' என்ற குரல் ஓங்கி ஒலிக்க, 'இலக்கியத்தில் இதைத்தான் எழுதலாம்- இதை எழுதக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது.  எழுதப்பட்ட விஷயம் இலக்கியமாகிறதா என்பது ஆராய்ச்சிக்குரியது' என்று ரகுநாதன் பதிலளித்திருக்கிறார்.

'பஞ்சமும் பசியும்' (1953) உழைப்பாளிகளின் பிரச்னைகளை பேசிய நாவல். அரசியல், சமூகம் சார்ந்த நாவல் வெளிவந்தபோது, அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. 

'இந்த நாவலை ஐரோப்பிய அறிஞர் கமில் ஸ்வலபில் 1957-இல் செக் மொழியில் மொழிபெயர்த்து, பிராக் நகரில் வெளியீட்டு விழா நடத்தி முதல் பதிப்பிலேயே 50 ஆயிரம்  பிரதிகள் விற்றுத் தீர்த்துள்ளார்' என்கிறார் பதிப்பாசிரியர். தொ.மு.சி.ரகுநாதன் நூற்றாண்டுக்கான இந்த நூல், தீவிர வாசிப்பாளர்களுக்கு நல்விருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.