சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

திருமந்திரம்  ஓர் அனுபவம் -  உரையாசிரியர்: புலவர் கே.ஏ. இராஜூ;  பக். 1040;  ரூ.1100;   கே.ஏ. இராஜூ, சென்னை - 19; ✆ 94444 43821.

திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம், உயிர்கள் தூய்மையடைந்து, பக்குவப்பட்ட நிலையில் இறைவனுடன் இயைவதை மூவாயிரம் பாடல்களில் விரிவாக விளக்குகிறது. இது  பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகப் போற்றப்படுகிறது.

ஒன்பது தந்திரங்களும், நந்திதேவரிடமிருந்து திருமூலர் பெற்ற ஒன்பது ஆகமங்களில் சாரம் என்பர். ஆன்மிக வாழ்வின் அடிப்படை நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் இவற்றை சிறப்பாக விளக்குகிறது திருமந்திரம். 

பொதுப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு, வான் சிறப்பு, அரசாட்சி முறைமை, அறம் செய்வான் திறம் உள்ளிட்ட 11 பகுதிகள் நூலில் இடம்பெற்றுள்ளன. அடுத்துள்ள தற்சிறப்புப் பாயிரத்தில் குரு பரம்பரையும், திருமூலரின் தன் வரலாறும் இடம்பெற்றுள்ளது. சிறப்புப் பாயிரத்தில், குரு மடத்தின் வரலாறும், திருமந்திரத் தொகை சிறப்பும் கூறப்பட்டுள்ளது.

ஒன்று முதல் ஒன்பது தந்திரங்கள் வரை வரிசையாக இடம்பெற்றுள்ளன. முதலாம் தந்திரத்தில் உள்ள நிலையாமை, கொல்லாமை, நல்குரவு, கல்வி, நடுவுநிலைமை, கள்ளுண்ணாமை போன்ற தலைப்புகள் மட்டுமல்லாது அவற்றில் இடம்பெற்றுள்ள பாடல்களின் கருத்துகளும் பெரும்பாலும் திருக்குறள் கருத்துகளையொட்டியே அமைந்துள்ளன.

இன்று  பலரும் அடிக்கடி பயன்படுத்தும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', 'அன்பே சிவம்', 'என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ்ச் செய்யுமாறே', 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' போன்ற தொடர்கள் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ளவையே.

சைவ சமயத்தின் சாத்திர நூலாக மட்டுமல்லாது தோத்திர நூலாகவும் விளங்கும் திருமந்திரத்தைக் கற்றுப் பொருளுணர இந்நூல் பெரிதும் உதவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.