சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குறுந்தொகையில் ஓரெழுத்து-பொருள் நுட்பம்

News image
Updated On :15 மே 2023, 12:22 pm

DIN

குறுந்தொகையில் ஓரெழுத்து-பொருள் நுட்பம் - முனைவர் நா.சுலோசனா, ரூ.110; பக்.186; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,  சென்னை-113;  ✆ 044,- 22542992.

தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் நினைவாக,  2015-ஆம் ஆண்டில் ஆசிரியர் கி.வைத்தியநாதனால் தொடங்கப்பட்ட அறக்கட்டளையில் நூலாசிரியர் ஆற்றிய சொற்பொழிவே, தொகுக்கப்பட்டு குறுந்தொகையில் ஓரெழுத்து-பொருள் நுட்ப நூலாக்கப்பட்டுள்ளது.

தமிழ் என்பது உலகின் பழமையான மொழி மட்டுமல்ல; அதன் எழுத்து, சொல் ஆகியவை உருவான விதம் பல ஆச்சரியங்களையும், அறிவியல்பூர்வமான அர்த்தங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.

ஓரெழுத்தானது ஒரு சொல்லாகி எப்படியெல்லாம் பல பொருள்களைத் தருகிறது என்பதை குறுந்தொகைப் பாடல் வாயிலாக நூலாசிரியர் விளக்கியுள்ளார். தொல்காப்பியம் ஏழு நெட்டெழுத்துகளை ஒரு மொழி எனக்கூறும் நிலையில், அதுவே நன்னூலில் நாற்பத்திரெண்டாகியிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.  ஆச்சரிய பொருள் தரும் அருந்தமிழ் எழுத்துகள் ஏராளம் என்பதை அறியும்போது வியப்பாக உள்ளது.

குறுந்தொகையில் 21 பெண்பாற்புலவர்களது பாடல்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறும் நூலாசிரியர், அவர்களில் ஒவ்வொருவரது குறுந்தொகைப் பாடல் பங்களிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

குறுந்தொகையில் ஓரெழுத்து-பொருள் நுட்பத்தை மட்டுமல்லாது, மொத்த குறுந்தொகைப் பாடல்களையும் ஆய்ந்து அதன் சாராம்சத்தை இளம்தலைமுறை தமிழ் ஆய்வாளர்கள் மட்டுமல்லாது தமிழ் ஆர்வலர்களும் எளிதில் அறியும் வகையில் அமைந்திருப்பதே நூலின் தனித்தன்மையாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.