சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

ஆத்ம சகோதரன் - தாவித் தியோப் (தமிழில் - எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி);  பக்.  112; ரூ. 150;  காலச்சுவடு பதிப்பகம்,  நாகர்கோவில் - 629001;  ✆ 04652 - 278525.

பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, புக்கர் பரிசு பெற்ற நாவல். ஆப்பிரிக்காவில் பதுங்குகுழியில் காத்திருந்தவாறு  பிரான்ஸுக்காக போரிடுகிறவனுடைய மனவோட்டத்தின் கதை.  நண்பனின் அதீதமான இறப்பை நினைத்துப் பார்ப்பதில் தொடங்கி, நினைவுகளாகவே நகர்ந்துசெல்கிறது.

கதைசொல்லியாக வரும் கறுப்பின ஆப்பிரிக்கரான 'வயது முதிர்ந்த ஒருவரின் மகன்' அல்பா நிந்தியாயே, 'தன் சகோதரனுக்கு மேலான  நண்பன்' மதெம்பாவை நினைத்துதான் நாவலின் முழுக் கதையையும் சொல்கிறான்.

போர்க்களத்தில் தன் கண் முன்னால் நேரிடும் மரணம், அதன் தாக்கத்தால் விளையும் அடுத்தடுத்த மரணங்கள், அதனால் தொடக்கத்தில் நிந்தியாயே பெறும் புகழும் தொடரும் பாதிப்புகளும் எனச் செல்கிறது நாவல். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் நிந்தியாயேவைக் கடந்து செல்லும் இரு பெண்களைப் பற்றியும்  விவரித்துச் செல்லும் கதையின் போக்கில் சொந்த கிராமத்தைப் பற்றிய சித்திரமும் கிடைக்கிறது.

உண்மையில் பைத்தியக்காரர்களால்தான் எதையும் கண்டு பயப்படாமல் இருக்க முடியும்..  ஒவ்வொரு நிகழ்வுக்கும் மனிதன் அபத்தமான முறையில் ஒருவரைப் பொறுப்பேற்க வைக்க முயற்சிக்கிறான்... என போகிறபோக்கில் நிந்தியாயேவின் சொற்களில் ஏராளமாகச் சொல்கிறார்  நாவலாசிரியர். 

'நிகழ்வுகள்தான் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன, மனிதன் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில்லை'  என்று தொடங்கும் வாழ்க்கை ரகசியங்கள் பற்றிய கிராமத்து முதியவரின் தீட்சை மொழிகள் பெருந்திறப்பு. மாறுபட்ட எழுத்து நடையின் ஆழத்தை உணர்த்துவதாக  இருக்கிறது நாவலின் முடிவு. ஆற்றொழுக்கான நல்ல மொழிபெயர்ப்பு. வாசிக்க வேண்டிய நாவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.