எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

செம்மொழித் தமிழும்... திரை இசை மொழியும்

News image
Updated On :8 ஜூலை 2024, 11:08 am

DIN

செம்மொழித் தமிழும்... திரை இசை மொழியும்: சுந்தர ஆவுடையப்பன்; பக்.432; ரூ.400; குமரன் பதிப்பகம், சென்னை-17; ✆9444013999.

அகில இந்திய வானொலியில் 29 ஆண்டுகள் பணிபுரிந்த நூலாசிரியர் தமிழ் இலக்கியத்துக்கும் திரை இசைப் பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமையை இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கவிதையாக சங்க இலக்கியம் விளங்கியது. இன்றைய படித்தவர் - பாமரர் என அனைவரின் கவிதையுமாக திரையிசைப் பாடல்கள் விளங்குகின்றன. இந்த இரு கவிதைப் போக்கையும் ஒப்புமைப்படுத்தி, நயங்காட்டி, தமிழின் செழுமையை காட்டும் முயற்சியில் நூலாசிரியர் இறங்கியுள்ளார். காதல், குடும்பம், கடவுள், நட்பு உள்ளிட்ட 129 தலைப்புகளில் இந்நூல் வெளிவந்துள்ளது.

உயிர்கள் தோன்றிய காலம் முதல் அதனுடன் இணைந்த உணர்வுகள் தொன்றுதொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய கலாசாரம் நவீனத்துவம் அடைந்துவிட்டதாகக் கருதினாலும், இவரது ஒப்புமை மூலம் தமிழரின் கலாசாரம் இன்றுவரை சங்க இலக்கியத்துடன் தொடர்புடையதாக உள்ளதை உணர முடிகிறது.

உதாரணத்துக்கு நற்றிணையின் நெய்தல் திணையில் வரும் 172-ஆவது பாடல் சுற்றுச்சூழல் மூலம் காதலரின் சந்திப்பை சங்கத் தமிழர் பதிவு செய்திருப்பர். இதே முறையில் "கிழக்குச் சீமையிலே' படத்தில் வரும் "ஆத்தங்கரை மரமே...' பாடல் காதலர்கள் சந்திப்பை பிரதிபலித்திருக்கும். இதுபோன்று ஒவ்வொரு அத்தியாயமும் சங்க இலக்கியத்துக்கும் திரையிசைப் பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. இசை, திரைத்துறைகளில் ஆர்வம் உள்ளோருக்கு இந்நூல் வரப்பிரசாதம்.

செம்மொழித் தமிழும்... திரை இசை மொழியும்: சுந்தர ஆவுடையப்பன்; பக்.432; ரூ.400; குமரன் பதிப்பகம், சென்னை-17; ✆9444013999.

அகில இந்திய வானொலியில் 29 ஆண்டுகள் பணிபுரிந்த நூலாசிரியர் தமிழ் இலக்கியத்துக்கும் திரை இசைப் பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமையை இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கவிதையாக சங்க இலக்கியம் விளங்கியது. இன்றைய படித்தவர் - பாமரர் என அனைவரின் கவிதையுமாக திரையிசைப் பாடல்கள் விளங்குகின்றன. இந்த இரு கவிதைப் போக்கையும் ஒப்புமைப்படுத்தி, நயங்காட்டி, தமிழின் செழுமையை காட்டும் முயற்சியில் நூலாசிரியர் இறங்கியுள்ளார். காதல், குடும்பம், கடவுள், நட்பு உள்ளிட்ட 129 தலைப்புகளில் இந்நூல் வெளிவந்துள்ளது.

உயிர்கள் தோன்றிய காலம் முதல் அதனுடன் இணைந்த உணர்வுகள் தொன்றுதொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய கலாசாரம் நவீனத்துவம் அடைந்துவிட்டதாகக் கருதினாலும், இவரது ஒப்புமை மூலம் தமிழரின் கலாசாரம் இன்றுவரை சங்க இலக்கியத்துடன் தொடர்புடையதாக உள்ளதை உணர முடிகிறது.

உதாரணத்துக்கு நற்றிணையின் நெய்தல் திணையில் வரும் 172-ஆவது பாடல் சுற்றுச்சூழல் மூலம் காதலரின் சந்திப்பை சங்கத் தமிழர் பதிவு செய்திருப்பர். இதே முறையில் "கிழக்குச் சீமையிலே' படத்தில் வரும் "ஆத்தங்கரை மரமே...' பாடல் காதலர்கள் சந்திப்பை பிரதிபலித்திருக்கும். இதுபோன்று ஒவ்வொரு அத்தியாயமும் சங்க இலக்கியத்துக்கும் திரையிசைப் பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. இசை, திரைத்துறைகளில் ஆர்வம் உள்ளோருக்கு இந்நூல் வரப்பிரசாதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.