எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிலம்பின் தேறல்

சிலப்பதிகாரத்தை பல்வேறு வகைகளில் ஆய்வு செய்து மேலும் அழகுபடுத்தியுள்ளார் நூலாசிரியர்.

News image
Updated On :31 ஜூலை 2024, 1:17 pm

DIN

சிலம்பின் தேறல் (ஆய்வு) - ப. முத்துமணி; பக். 176; ரூ. 250; வையைப் பதிப்பகம், தேனி-625534; ✆9842370792.

சிலப்பதிகாரத்தை பல்வேறு வகைகளில் ஆய்வு செய்து மேலும் அழகுபடுத்தியுள்ளார் நூலாசிரியர்.

'சிலம்பின் கொற்றவை' என்ற கட்டுரையில் கொற்றவைதான் பிற்காலத்தில் காளி, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவதை விளக்கி, அதை நிறுவியுள்ள விதம் வியக்க வைக்கிறது.

மன்னர்களால் சிறப்பிக்கப்பட்ட இந்திர விழா, பின்னர் ஏன் விலக்கிவைக்கப்பட்டது என்ற புதிய கோணத்திலான 'சிலம்பின் இந்திரவிழா' கட்டுரை சிந்தனையைத் தூண்டுகிறது.

பொங்கல் திருநாள் வழியாக, பசு, காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதும், ஏறு தழுவுதலில் வீரம்-காதல் ஆகிய இரண்டும் உள்ளதும் நமது பெருமைமிகு பண்பாடு என்பதை விளக்குகிறது 'சிலம்பின் ஏறு தழுவுதல்' கட்டுரை.

'தனக்காக வாழ்வது இன்பம் தரலாம் என்றாலும் பிறருக்காக வாழ்வதே அறம், பேரின்பம். அதுவே மனிதர்க்கு அழிவில்லாத ஆபரணம்' என்பதை 'சிலம்பின் அணிகலன் அறம்' கட்டுரையும், வடநாட்டு மன்னர்களின் தலைகளின் மீது கற்களைச் சுமந்துவரச் செய்த தமிழ் மன்னர்களின் வீரம் ஈடில்லாதது என்பதை 'சிலம்பின் கல் கொண்டான்' கட்டுரையும் எடுத்துரைக்கின்றன. சிலம்பின் ஊழ் மீட்டிய யாழ், சிலம்பின் ஐவகை நிலங்கள், சிலம்பின் நாவலன் (மாடலன்), சிலம்பின் மானுட உளவியல் உள்ளிட்ட 11 கட்டுரைகளும் நூலாசிரியர் ஆய்வுக் கடலில் மூழ்கி எடுத்த நல்முத்துகள். ஆய்வு செய்வோருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பேருவகை தரும் நூல்.

சிலம்பின் தேறல் (ஆய்வு) - ப. முத்துமணி; பக். 176; ரூ. 250; வையைப் பதிப்பகம், தேனி-625534; ✆9842370792.

சிலப்பதிகாரத்தை பல்வேறு வகைகளில் ஆய்வு செய்து மேலும் அழகுபடுத்தியுள்ளார் நூலாசிரியர்.

'சிலம்பின் கொற்றவை' என்ற கட்டுரையில் கொற்றவைதான் பிற்காலத்தில் காளி, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவதை விளக்கி, அதை நிறுவியுள்ள விதம் வியக்க வைக்கிறது.

மன்னர்களால் சிறப்பிக்கப்பட்ட இந்திர விழா, பின்னர் ஏன் விலக்கிவைக்கப்பட்டது என்ற புதிய கோணத்திலான 'சிலம்பின் இந்திரவிழா' கட்டுரை சிந்தனையைத் தூண்டுகிறது.

பொங்கல் திருநாள் வழியாக, பசு, காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதும், ஏறு தழுவுதலில் வீரம்-காதல் ஆகிய இரண்டும் உள்ளதும் நமது பெருமைமிகு பண்பாடு என்பதை விளக்குகிறது 'சிலம்பின் ஏறு தழுவுதல்' கட்டுரை.

'தனக்காக வாழ்வது இன்பம் தரலாம் என்றாலும் பிறருக்காக வாழ்வதே அறம், பேரின்பம். அதுவே மனிதர்க்கு அழிவில்லாத ஆபரணம்' என்பதை 'சிலம்பின் அணிகலன் அறம்' கட்டுரையும், வடநாட்டு மன்னர்களின் தலைகளின் மீது கற்களைச் சுமந்துவரச் செய்த தமிழ் மன்னர்களின் வீரம் ஈடில்லாதது என்பதை 'சிலம்பின் கல் கொண்டான்' கட்டுரையும் எடுத்துரைக்கின்றன. சிலம்பின் ஊழ் மீட்டிய யாழ், சிலம்பின் ஐவகை நிலங்கள், சிலம்பின் நாவலன் (மாடலன்), சிலம்பின் மானுட உளவியல் உள்ளிட்ட 11 கட்டுரைகளும் நூலாசிரியர் ஆய்வுக் கடலில் மூழ்கி எடுத்த நல்முத்துகள். ஆய்வு செய்வோருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பேருவகை தரும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.