தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

விழுப்புரம் மாவட்டம் கல்தோன்றிய காலம் முதல்...

News image
- SWAMINATHAN
Updated On :12 ஜூன் 2024, 12:47 pm

DIN

விழுப்புரம் மாவட்டம் கல்தோன்றிய காலம் முதல்...- கோ.செங்குட்டுவன்; பக்.320; ரூ.350; பி.எஸ்.பப்ளிகேஷன், விழுப்புரம்-605 602; ✆ 9944622046.

உலகம் தோன்றிய காலம் தொட்டு தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்து, தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் வரலாற்றை சுருக்கமான, கருத்துகளின் தொகுப்பே இந்த நூல். இந்த மாவட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிவு, மக்களின் கலாசாரம், பொருளாதாரம், அரசியல் என அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களை அடுக்கி படிப்போரை வியக்க வைத்திருக்கிறார் நூலாசிரியர்.

'அகழில் மிகப் பழமையான சமண கல்வெட்டுகள் தமிழின் மிகப் பழமையான கல்வெட்டு, குன்னம் கிரானைட் பாறைகள், வழுதாவூர் படிவப் பாறைகள், திருவக்கரை கல்மரங்கள், ஓடைதேரி மண்டையோடு, பெருங்கற்கள், பாறை ஓவியங்கள் என பல அறிவியல்பூர்வ ஆதாரங்களை வைத்து ஆதித் தமிழ் நாகரிகம் வளர்ந்த இடங்களில் விழுப்புரம் மாவட்டம் முக்கிய இடத்தை வகிப்பதை சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

'260 கோடி ஆண்டுகளுக்கு முன்பு', 'முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்' உள்ளிட்ட 27 கட்டுரைகள் அரிய, வியத்தகு செய்திகளை உள்ளடக்கியுள்ளன.

பல்லவர், சோழர், காடவராயர், விஜயநகர ஆட்சி, செஞ்சி நாயக்கர்கள் ஆட்சி, முகலாயர் ஆட்சி, பிரெஞ்சியர், ஆங்கிலேயர் என அந்நியரின் ஆட்சியில் எவ்வளவு போர்களை விழுப்புரம் சந்தித்தது என்பதையும், விடுதலைப் போரில் மாவட்டப் பங்களிப்பை நூலில் சரியான முறையில் விளக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கிய பிரபலங்கள் பட்டியல் நூலுக்கு மெருகூட்டுகிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

விழுப்புரம் மாவட்டம் கல்தோன்றிய காலம் முதல்...- கோ.செங்குட்டுவன்; பக்.320; ரூ.350; பி.எஸ்.பப்ளிகேஷன், விழுப்புரம்-605 602; ✆ 9944622046.

உலகம் தோன்றிய காலம் தொட்டு தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்து, தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் வரலாற்றை சுருக்கமான, கருத்துகளின் தொகுப்பே இந்த நூல். இந்த மாவட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிவு, மக்களின் கலாசாரம், பொருளாதாரம், அரசியல் என அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களை அடுக்கி படிப்போரை வியக்க வைத்திருக்கிறார் நூலாசிரியர்.

'அகழில் மிகப் பழமையான சமண கல்வெட்டுகள் தமிழின் மிகப் பழமையான கல்வெட்டு, குன்னம் கிரானைட் பாறைகள், வழுதாவூர் படிவப் பாறைகள், திருவக்கரை கல்மரங்கள், ஓடைதேரி மண்டையோடு, பெருங்கற்கள், பாறை ஓவியங்கள் என பல அறிவியல்பூர்வ ஆதாரங்களை வைத்து ஆதித் தமிழ் நாகரிகம் வளர்ந்த இடங்களில் விழுப்புரம் மாவட்டம் முக்கிய இடத்தை வகிப்பதை சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

'260 கோடி ஆண்டுகளுக்கு முன்பு', 'முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்' உள்ளிட்ட 27 கட்டுரைகள் அரிய, வியத்தகு செய்திகளை உள்ளடக்கியுள்ளன.

பல்லவர், சோழர், காடவராயர், விஜயநகர ஆட்சி, செஞ்சி நாயக்கர்கள் ஆட்சி, முகலாயர் ஆட்சி, பிரெஞ்சியர், ஆங்கிலேயர் என அந்நியரின் ஆட்சியில் எவ்வளவு போர்களை விழுப்புரம் சந்தித்தது என்பதையும், விடுதலைப் போரில் மாவட்டப் பங்களிப்பை நூலில் சரியான முறையில் விளக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கிய பிரபலங்கள் பட்டியல் நூலுக்கு மெருகூட்டுகிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.