போட்டித் தேர்வு பதினைந்தும் புதிது
போட்டித் தேர்வு எழுதுவோர் மட்டுமல்ல; இல்லங்கள், கல்விநிலையங்கள்தோறும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான நூல்.


போட்டித் தேர்வு பதினைந்தும் புதிது- முனைவர் இரா.திருநாவுக்கரசு; பக்.158; ரூ.150; தமிழோடு நாம், மதுரை-19; ✆75981 68854.
குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெறும் நோக்கில், ஐ.பி.எஸ். அலுவலரான நூலாசிரியர் எழுதிய வழிகாட்டுதல் நூலாகும். முக்கிய சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளோடு, தனது சொந்த அனுபவத்தையும் இணைத்து திருக்குறள்களோடு மேற்கொள்காட்டியிருப்பது சிறப்பு.
சோர்ந்து கிடக்கும் இளையதலைமுறையினருக்கு புத்துணர்வு அளிப்பதோடு, போட்டித் தேர்வர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிப்பதோடு அவர்கள் வெற்றியாளராகவும் சாதனையாளராகவும் மாற வழிகோலும் வகையில் இந்த நூலை எளிய நடையில் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
போட்டிக்கு எப்போதும் தன்னை தயார் நிலையில் வைத்திருத்தல், தோல்வியைக் கண்டு மனம் தளராமல் இருத்தல், தோல்வியில் இருந்து பாடம் கற்றல், வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுதல் என்ற நான்கு பகுதிகளில், எண்ணற்ற தகவல்களை அள்ளி தெளித்துள்ளார்.
தொடங்குவதற்கு முன், வலிமை, சுற்றம் தெரிந்துகொள், வியூகமே விஸ்வரூபம், சவாலைச் சமாளி, உடலே உறுதுணை, கட்டுக்குள் மனது, வெற்றிச் சமன்பாடு, தொடர் முயற்சி, 10 ஆயிரம் மணி நேரம், காலமே சுவாசம், கற்றல் என்பது 3 ஆர், மாதம் 1%, நேற்று இன்று நாளை, தேர்வுக்கு முன் உள்ளிட்ட 15 தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் சாதனையாளர்களாக மாற்றுவதற்கான உத்வேகத்தை அளிக்கின்றன.
போட்டித் தேர்வு எழுதுவோர் மட்டுமல்ல; இல்லங்கள், கல்விநிலையங்கள்தோறும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான நூல்.
போட்டித் தேர்வு பதினைந்தும் புதிது- முனைவர் இரா.திருநாவுக்கரசு; பக்.158; ரூ.150; தமிழோடு நாம், மதுரை-19; ✆75981 68854.
குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெறும் நோக்கில், ஐ.பி.எஸ். அலுவலரான நூலாசிரியர் எழுதிய வழிகாட்டுதல் நூலாகும். முக்கிய சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளோடு, தனது சொந்த அனுபவத்தையும் இணைத்து திருக்குறள்களோடு மேற்கொள்காட்டியிருப்பது சிறப்பு.
சோர்ந்து கிடக்கும் இளையதலைமுறையினருக்கு புத்துணர்வு அளிப்பதோடு, போட்டித் தேர்வர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிப்பதோடு அவர்கள் வெற்றியாளராகவும் சாதனையாளராகவும் மாற வழிகோலும் வகையில் இந்த நூலை எளிய நடையில் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
போட்டிக்கு எப்போதும் தன்னை தயார் நிலையில் வைத்திருத்தல், தோல்வியைக் கண்டு மனம் தளராமல் இருத்தல், தோல்வியில் இருந்து பாடம் கற்றல், வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுதல் என்ற நான்கு பகுதிகளில், எண்ணற்ற தகவல்களை அள்ளி தெளித்துள்ளார்.
தொடங்குவதற்கு முன், வலிமை, சுற்றம் தெரிந்துகொள், வியூகமே விஸ்வரூபம், சவாலைச் சமாளி, உடலே உறுதுணை, கட்டுக்குள் மனது, வெற்றிச் சமன்பாடு, தொடர் முயற்சி, 10 ஆயிரம் மணி நேரம், காலமே சுவாசம், கற்றல் என்பது 3 ஆர், மாதம் 1%, நேற்று இன்று நாளை, தேர்வுக்கு முன் உள்ளிட்ட 15 தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் சாதனையாளர்களாக மாற்றுவதற்கான உத்வேகத்தை அளிக்கின்றன.
போட்டித் தேர்வு எழுதுவோர் மட்டுமல்ல; இல்லங்கள், கல்விநிலையங்கள்தோறும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...