

திருவிளையாடல் - பின்னலூர் மு.விவேகானந்தன்; பக். 160; ரூ. 175; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-4; ✆93805 30884.
இறைவனே சாதாரண மனிதனாகத் தோன்றி திருவிளையாடல்களை நிகழ்த்திய மண் தமிழகத்திலுள்ள மாமதுரை. மதுரையை ஆண்ட மலையத்துவசப் பாண்டிய மன்னனின் மகளான மீனாட்சியை ஈசனே சோமசுந்தரராக வந்து திருமணம் செய்தார் என்பதும், அதற்காக அவர் நடத்திய திருவிளையாடல்களும் பக்திச்சுவையின் உச்சங்கள்.
ஈசன் தனது பக்தர்களுக்காக இரங்கி நிகழ்த்திய 64 திருவிளையாடல்களும் கர்ண பரம்பரைக் கதைகளாக சமூகத்தில் நிலவி வந்தன. அவற்றை பிற்பாடு பல புலவர்கள் நூலாக்கி இருக்கின்றனர். அவர்களின் அடியொற்றி, 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் என்ற செய்யுள் இலக்கியத்தைப் படைத்திருக்கிறார்.
மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என மூன்று காண்டங்களையும், 65 படலங்களையும் கொண்டதாக திருவிளையாடற் புராணம் விளங்குகிறது. அந்த நூலுக்கு உரைநடைச் சுருக்கத்தை வழங்கி இருக்கிறார் எழுத்தாளரும் வழக்குரைஞருமான பின்னலூர் மு.விவேகானந்தன். இந்நூலுக்கு நீதியரசர்கள் வெ.இராமசுப்பிரமணியன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
பக்தி உணர்வும், தமிழ்ச் சுவையும் கூடிய அற்புதமான தமிழ் இலக்கியத்துக்கு காலத்துக்கேற்ற எளிய உரைநடைச் சுருக்கத்தை நூலாசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. நூலின் இடையே முக்கியமான பாடல்களும் ஆங்காங்கே அணி செய்கின்றன.
ஆன்மிக ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.
திருவிளையாடல் - பின்னலூர் மு.விவேகானந்தன்; பக். 160; ரூ. 175; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-4; ✆93805 30884.
இறைவனே சாதாரண மனிதனாகத் தோன்றி திருவிளையாடல்களை நிகழ்த்திய மண் தமிழகத்திலுள்ள மாமதுரை. மதுரையை ஆண்ட மலையத்துவசப் பாண்டிய மன்னனின் மகளான மீனாட்சியை ஈசனே சோமசுந்தரராக வந்து திருமணம் செய்தார் என்பதும், அதற்காக அவர் நடத்திய திருவிளையாடல்களும் பக்திச்சுவையின் உச்சங்கள்.
ஈசன் தனது பக்தர்களுக்காக இரங்கி நிகழ்த்திய 64 திருவிளையாடல்களும் கர்ண பரம்பரைக் கதைகளாக சமூகத்தில் நிலவி வந்தன. அவற்றை பிற்பாடு பல புலவர்கள் நூலாக்கி இருக்கின்றனர். அவர்களின் அடியொற்றி, 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் என்ற செய்யுள் இலக்கியத்தைப் படைத்திருக்கிறார்.
மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என மூன்று காண்டங்களையும், 65 படலங்களையும் கொண்டதாக திருவிளையாடற் புராணம் விளங்குகிறது. அந்த நூலுக்கு உரைநடைச் சுருக்கத்தை வழங்கி இருக்கிறார் எழுத்தாளரும் வழக்குரைஞருமான பின்னலூர் மு.விவேகானந்தன். இந்நூலுக்கு நீதியரசர்கள் வெ.இராமசுப்பிரமணியன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
பக்தி உணர்வும், தமிழ்ச் சுவையும் கூடிய அற்புதமான தமிழ் இலக்கியத்துக்கு காலத்துக்கேற்ற எளிய உரைநடைச் சுருக்கத்தை நூலாசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. நூலின் இடையே முக்கியமான பாடல்களும் ஆங்காங்கே அணி செய்கின்றன.
ஆன்மிக ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரப்பெற்றோம் (02.03.2026)

வரப்பெற்றோம் (23-02-2026)
உதயபானு கான்மலர்

வரப்பெற்றோம் (16-02-2026)
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

