மகாதேவ தேசாய் (காந்தியின் நிழல்)
முக்கியமானவரான மகாதேவ தேசாயின் வாழ்க்கை வரலாறே இந்த நூல்.


மகாதேவ தேசாய் (காந்தியின் நிழல்) - தி.விப்ர நாராயணன்; பக். 208; ரூ.220; பவித்ரா & மித்ரஸ் பதிப்பகம், கோவை-38; ✆87789 24880.
குருவை விஞ்சும் சிஷ்யனாக, மகாத்மா காந்தியின் நிழலாக, காந்தியின் நீட்சியாக, காந்தி குறித்த பதிவுகளை மிகவும் நுணுக்கமாகப் பதிவு செய்ததில் மிகவும்
முக்கியமானவரான மகாதேவ தேசாயின் வாழ்க்கை வரலாறே இந்த நூல்.
காந்திஜியோடு இணைந்து பணியாற்ற பெரும் விருப்பத்தோடு காத்திருந்த தேசாய்க்கு, காந்தியிடமிருந்து அழைப்பு வந்தது முதல் தனது இறுதி மூச்சு வரை காந்தியிடமிருந்து பிரிக்க முடியாதவராக, தந்தை - மகன் போன்ற உறவாக வாழ்ந்து, காந்தியின் மடியிலேயே உயிர் துறந்த தேசாயின் வாழ்க்கை போற்றுதலுக்கு உரியது.
தேசாய் இறந்தவுடன் அவரது உடலை எரித்த சாம்பலை காந்தியடிகள் தினமும் பூசிக் கொண்டிருந்தார் என்னும் தகவல் அவரின் அன்பால் காந்தி எந்த அளவுக்கு ஆட்கொள்ளப்பட்டிருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது.
காந்திஜியின் செயலாளராக மட்டுமல்லாது, தோழனாக, நேருக்கு நேர் விவாதம் செய்து இடித்துரைக்கும் நண்பராக, அவருடன் போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் செல்லவும்
தயங்காதவராக, ஆசிரமத்தின் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுபவராக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டார் மகாதேவ தேசாய்.
'காந்தியின் மகன் மகாதேவ் தேசாய்' என்று ஆச்சாரிய வினோபா பாவேவும், 'மகாதேவ தேசாய் காந்தியின் மறு உடல்' என்று இராஜாஜியும், 'மகாதேவ் இருப்பதால் என்னால் இரண்டு மடங்கு வேலைகளை செய்ய முடிகிறது' என்று காந்திஜியே சிலாகிக்கும் அளவுக்கு தேசாய் என்ன தியாகம் செய்தார், எப்படி செயலாற்றினார் என்பதற்கான நிகழ்வுகள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
தேசாயின் வாழ்க்கை வரலாறும், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பொருளும் ஒன்றுதான். இந்த நூல் சேவையில் தன்னையே இழந்தவரின் வரலாறு மட்டுமல்ல; ஒரு செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாக வாழ்ந்தவரின் வரலாறும் கூட.
மகாதேவ தேசாய் (காந்தியின் நிழல்) - தி.விப்ர நாராயணன்; பக். 208; ரூ.220; பவித்ரா & மித்ரஸ் பதிப்பகம், கோவை-38; ✆87789 24880.
குருவை விஞ்சும் சிஷ்யனாக, மகாத்மா காந்தியின் நிழலாக, காந்தியின் நீட்சியாக, காந்தி குறித்த பதிவுகளை மிகவும் நுணுக்கமாகப் பதிவு செய்ததில் மிகவும்
முக்கியமானவரான மகாதேவ தேசாயின் வாழ்க்கை வரலாறே இந்த நூல்.
காந்திஜியோடு இணைந்து பணியாற்ற பெரும் விருப்பத்தோடு காத்திருந்த தேசாய்க்கு, காந்தியிடமிருந்து அழைப்பு வந்தது முதல் தனது இறுதி மூச்சு வரை காந்தியிடமிருந்து பிரிக்க முடியாதவராக, தந்தை - மகன் போன்ற உறவாக வாழ்ந்து, காந்தியின் மடியிலேயே உயிர் துறந்த தேசாயின் வாழ்க்கை போற்றுதலுக்கு உரியது.
தேசாய் இறந்தவுடன் அவரது உடலை எரித்த சாம்பலை காந்தியடிகள் தினமும் பூசிக் கொண்டிருந்தார் என்னும் தகவல் அவரின் அன்பால் காந்தி எந்த அளவுக்கு ஆட்கொள்ளப்பட்டிருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது.
காந்திஜியின் செயலாளராக மட்டுமல்லாது, தோழனாக, நேருக்கு நேர் விவாதம் செய்து இடித்துரைக்கும் நண்பராக, அவருடன் போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் செல்லவும்
தயங்காதவராக, ஆசிரமத்தின் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுபவராக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டார் மகாதேவ தேசாய்.
'காந்தியின் மகன் மகாதேவ் தேசாய்' என்று ஆச்சாரிய வினோபா பாவேவும், 'மகாதேவ தேசாய் காந்தியின் மறு உடல்' என்று இராஜாஜியும், 'மகாதேவ் இருப்பதால் என்னால் இரண்டு மடங்கு வேலைகளை செய்ய முடிகிறது' என்று காந்திஜியே சிலாகிக்கும் அளவுக்கு தேசாய் என்ன தியாகம் செய்தார், எப்படி செயலாற்றினார் என்பதற்கான நிகழ்வுகள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
தேசாயின் வாழ்க்கை வரலாறும், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பொருளும் ஒன்றுதான். இந்த நூல் சேவையில் தன்னையே இழந்தவரின் வரலாறு மட்டுமல்ல; ஒரு செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாக வாழ்ந்தவரின் வரலாறும் கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...