சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பொதிகைமலைச் சாரல்

நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஆவணம்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 11:01 am

DIN

பொதிகைமலைச் சாரல் (தென்காசி மாவட்ட எழுத்தாளர்களின் கட்டுரைகள், சிறுகதைகள்) - தொகுப்பாசிரியர்கள்: நாறும்பூநாதன்,வேலாயுத முத்துக்குமார்; பக்.496; ரூ.300; மாவட்ட நிர்வாகம், தென்காசி.

தமிழ் இலக்கியத்துக்கு தங்களது பெரும் பங்களிப்பைத் தந்த, இப்போதும் தந்துகொண்டிருக்கும் தென்காசி மாவட்ட படைப்பாளிகளின் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு இப்புத்தகம். 13 கட்டுரைகளும் 38 சிறுகதைகளும் கொண்ட இத்தொகுப்பில் செங்கோட்டை ஆவுடையக்காளின் சித்தாந்தப் பாடலின் வழியேஅழைத்துச் செல்கிறார்கள் தொகுப்பாசிரியர்கள்.

பாரதி குறித்து செல்லம்மாள் பாரதி ஆற்றிய வானொலி உரையான முதல் கட்டுரையை வாசிக்கும் போது பாரதி போற்றிய பெண்ணுரிமைக்கான நீட்சி செல்லம்மாளின் சொல்லாடலில் தெரிகிறது . தமிழ் இலக்கிய உலகம் பெருமை கொள்ளும் உயர்ந்த படைப்பாளர்களும் அவர்களின் ஆகச் சிறந்த முக்கிய கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

தினமணியின் முதல் ஆசிரியரான டி.எஸ். சொக்கலிங்கம் எவ்வாறு அந்தப் பொறுப்புக்கு வந்தார், அவரோடு ஏ.என். சிவராமன் எவ்வாறு இணைந்தார் என்கிற தகவல்கள் சுவாரஸ்யம்.

ரசிகமணியின் ரசனை, தேவநேயப்பாவாணரின் மதம் குறித்த பார்வை ஆகியவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கழனியூரனின் இஸ்லாமிய நாட்டாரியலில் இஸ்லாமிய தாலாட்டு நம் மனதில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் தவிர்க்க முடியாத கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பில் சிறுகதைகளின் அணிவகுப்பும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள், கவிஞர்களாகப் புகழ்பெற்ற விக்கிரமாதித்யன், கலாப்ரியா ஆகியோரின் யதார்த்தமான சிறுகதைகள் மற்றும் புதிய படைப்பாளிகளின் சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஆவணம்.

பொதிகைமலைச் சாரல் (தென்காசி மாவட்ட எழுத்தாளர்களின் கட்டுரைகள், சிறுகதைகள்) - தொகுப்பாசிரியர்கள்: நாறும்பூநாதன்,வேலாயுத முத்துக்குமார்; பக்.496; ரூ.300; மாவட்ட நிர்வாகம், தென்காசி.

தமிழ் இலக்கியத்துக்கு தங்களது பெரும் பங்களிப்பைத் தந்த, இப்போதும் தந்துகொண்டிருக்கும் தென்காசி மாவட்ட படைப்பாளிகளின் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு இப்புத்தகம். 13 கட்டுரைகளும் 38 சிறுகதைகளும் கொண்ட இத்தொகுப்பில் செங்கோட்டை ஆவுடையக்காளின் சித்தாந்தப் பாடலின் வழியேஅழைத்துச் செல்கிறார்கள் தொகுப்பாசிரியர்கள்.

பாரதி குறித்து செல்லம்மாள் பாரதி ஆற்றிய வானொலி உரையான முதல் கட்டுரையை வாசிக்கும் போது பாரதி போற்றிய பெண்ணுரிமைக்கான நீட்சி செல்லம்மாளின் சொல்லாடலில் தெரிகிறது . தமிழ் இலக்கிய உலகம் பெருமை கொள்ளும் உயர்ந்த படைப்பாளர்களும் அவர்களின் ஆகச் சிறந்த முக்கிய கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

தினமணியின் முதல் ஆசிரியரான டி.எஸ். சொக்கலிங்கம் எவ்வாறு அந்தப் பொறுப்புக்கு வந்தார், அவரோடு ஏ.என். சிவராமன் எவ்வாறு இணைந்தார் என்கிற தகவல்கள் சுவாரஸ்யம்.

ரசிகமணியின் ரசனை, தேவநேயப்பாவாணரின் மதம் குறித்த பார்வை ஆகியவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கழனியூரனின் இஸ்லாமிய நாட்டாரியலில் இஸ்லாமிய தாலாட்டு நம் மனதில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் தவிர்க்க முடியாத கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பில் சிறுகதைகளின் அணிவகுப்பும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள், கவிஞர்களாகப் புகழ்பெற்ற விக்கிரமாதித்யன், கலாப்ரியா ஆகியோரின் யதார்த்தமான சிறுகதைகள் மற்றும் புதிய படைப்பாளிகளின் சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஆவணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.