சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பழந்தமிழ்

திராவிட மொழிகளில் கிடைத்த இலக்கியங்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது, சிறப்பு.

News image
Updated On :27 ஜனவரி 2025, 9:22 am

DIN

பழந்தமிழ் - பேராசிரியர் சி.இலக்குவனார்; பக்.191; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21; ✆ 93805 30884.

தமிழின் தொன்மை குறித்து நுட்பமாகவும், உரிய தரவுகளுடன் நூலாசிரியர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பேச்சு மொழி, எழுத்து மொழி மற்றும் மொழிக் குடும்பங்கள், தமிழ்ச் சொற்கள் பிற மொழிகளில் கையாளப்படும் விதம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

பண்பட்ட இலக்கணமும், இலக்கியங்களையும் கொண்டுள்ளதால் காலத்தை வென்று தமிழ் வாழ்கிறது.

திராவிட மொழிக் குடும்பங்களுக்கு தமிழைத் தாய் என்றும், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தமிழ்ச் சொற்கள் மருவி வழங்கப்படுவது குறித்தும் சான்றுகளுடன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இலக்கியங்கள், இலக்கணங்கள் தோன்றியிருந்தன. அவற்றின் துணையால் தொல்காப்பியர் தனது நூலை இயற்றினார் என்பதிலிருந்து தமிழின் தொன்மையை அறியலாம். தமிழ் இலக்கியங்கள்தாம் பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு முன்னோடி என்ற தகவலும், திராவிட மொழிகளில் கிடைத்த இலக்கியங்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது, சிறப்பு.

இந்திய நாகரிகத்தின் பெரும் பகுதி பழந்தமிழர் நாகரிமே என்பதை, தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழர் வாழ்வு, பண்பாடு, வாழ்வியல் முறை, வணிகம் போன்றவை பற்றிய குறிப்புகளால் அறியலாம். இலக்கியத்தின் சிறப்புகளையும், இன்றியமையாமையையும் அறிந்தே நமது முன்னோர்கள் மொழிக் கூறுபாடுகளுள் இலக்கியத்தை இணைத்துள்ளனர். அவை தமிழ் மக்களின் வரலாற்றை அறிய துணைபுரிகின்றன.

தமிழின் மறுமலர்ச்சிக்கு மாநில அளவில் அனைத்துத்துறைகளிலும் பயன்படும் கருவியாய் தமிழ் மொழி அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நூலாசிரியரின் கருத்து ஏற்கத்தக்கதே.

பழந்தமிழ் - பேராசிரியர் சி.இலக்குவனார்; பக்.191; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21; ✆ 93805 30884.

தமிழின் தொன்மை குறித்து நுட்பமாகவும், உரிய தரவுகளுடன் நூலாசிரியர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பேச்சு மொழி, எழுத்து மொழி மற்றும் மொழிக் குடும்பங்கள், தமிழ்ச் சொற்கள் பிற மொழிகளில் கையாளப்படும் விதம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

பண்பட்ட இலக்கணமும், இலக்கியங்களையும் கொண்டுள்ளதால் காலத்தை வென்று தமிழ் வாழ்கிறது.

திராவிட மொழிக் குடும்பங்களுக்கு தமிழைத் தாய் என்றும், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தமிழ்ச் சொற்கள் மருவி வழங்கப்படுவது குறித்தும் சான்றுகளுடன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இலக்கியங்கள், இலக்கணங்கள் தோன்றியிருந்தன. அவற்றின் துணையால் தொல்காப்பியர் தனது நூலை இயற்றினார் என்பதிலிருந்து தமிழின் தொன்மையை அறியலாம். தமிழ் இலக்கியங்கள்தாம் பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு முன்னோடி என்ற தகவலும், திராவிட மொழிகளில் கிடைத்த இலக்கியங்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது, சிறப்பு.

இந்திய நாகரிகத்தின் பெரும் பகுதி பழந்தமிழர் நாகரிமே என்பதை, தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழர் வாழ்வு, பண்பாடு, வாழ்வியல் முறை, வணிகம் போன்றவை பற்றிய குறிப்புகளால் அறியலாம். இலக்கியத்தின் சிறப்புகளையும், இன்றியமையாமையையும் அறிந்தே நமது முன்னோர்கள் மொழிக் கூறுபாடுகளுள் இலக்கியத்தை இணைத்துள்ளனர். அவை தமிழ் மக்களின் வரலாற்றை அறிய துணைபுரிகின்றன.

தமிழின் மறுமலர்ச்சிக்கு மாநில அளவில் அனைத்துத்துறைகளிலும் பயன்படும் கருவியாய் தமிழ் மொழி அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நூலாசிரியரின் கருத்து ஏற்கத்தக்கதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.