மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சேக்கிழார் பெரிய புராணம் (திருத்தொண்டர் புராணம்)

இந்த உரைநூல் தமிழர்களுக்கும், சைவ அடியார்களுக்கும், பக்தி இலக்கியத்துக்கும் கிடைத்த பொக்கிஷம்.

News image
Updated On :23 ஜூன் 2025, 1:22 pm

சேக்கிழார் பெரிய புராணம் (திருத்தொண்டர் புராணம்) - உரையாசிரியர் அ.ஜம்புலிங்கம்; முதல் காண்டம் பக். 672; ரூ.800; இரண்டாம் காண்டம் பக். 792; ரூ. 900; இந்துமதி பதிப்பகம், லால்பேட்டை தெரு, சிதம்பரம் -608001. ✆ 93459 79726.

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்ஊஊஊபு நூலாகவும் சேக்கிழார் படைத்த பெரிய புராணத்தை, உரையாசிரியர் இரண்டு காண்டங்கள், 13 சருக்கங்களாகப் பிரித்து 4,286 பாடல்களுக்கும் உரை எழுதி உள்ளார்.

வடமொழியில் வேதங்கள் முதன்மையாக விளங்குவதுபோல, தமிழ் மொழியில் திருமுறைகள் எல்லாம் முதன்மை பெற்றுத் திகழ்கின்றன. பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணம் 63 நாயன்மார்கள் வரலாற்றையும், அவர்தம் திருத்தொண்டு திறங்கள் குறித்தும் எடுத்துரைக்கிறது.

பெரிய புராணத்தின் 4,286 பாடல்களுக்கும் உரை எழுதுதல் எளிய செயல் அல்ல. ஓராண்டுக்கும் மேலான கடினமான முயற்சியின் விளைவாக "மெய்ம்மொழிப் பொருள் விளக்கம்' என்ற இந்நூலை செம்மையாக வெளிக்கொணர்ந்த உரையாசிரியரின் செயல் போற்றத்தக்கது.

செயற்கரிய செயல்களைச் செய்த பெரியோர்களின் வரலாற்றைப் பதிவு செய்து, மக்கள் சிந்தையுள் காணப்படும் ஆணவ இருளைப்போக்கி, வீடுபேற்றை அளிக்கவல்ல பெரிய புராணத்தின் இந்த உரைநூல் தமிழர்களுக்கும், சைவ அடியார்களுக்கும், பக்தி இலக்கியத்துக்கும் கிடைத்த பொக்கிஷம்.

சேக்கிழார் பெரிய புராணம் (திருத்தொண்டர் புராணம்) - உரையாசிரியர் அ.ஜம்புலிங்கம்; முதல் காண்டம் பக். 672; ரூ.800; இரண்டாம் காண்டம் பக். 792; ரூ. 900; இந்துமதி பதிப்பகம், லால்பேட்டை தெரு, சிதம்பரம் -608001. ✆ 93459 79726.

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்ஊஊஊபு நூலாகவும் சேக்கிழார் படைத்த பெரிய புராணத்தை, உரையாசிரியர் இரண்டு காண்டங்கள், 13 சருக்கங்களாகப் பிரித்து 4,286 பாடல்களுக்கும் உரை எழுதி உள்ளார்.

வடமொழியில் வேதங்கள் முதன்மையாக விளங்குவதுபோல, தமிழ் மொழியில் திருமுறைகள் எல்லாம் முதன்மை பெற்றுத் திகழ்கின்றன. பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணம் 63 நாயன்மார்கள் வரலாற்றையும், அவர்தம் திருத்தொண்டு திறங்கள் குறித்தும் எடுத்துரைக்கிறது.

பெரிய புராணத்தின் 4,286 பாடல்களுக்கும் உரை எழுதுதல் எளிய செயல் அல்ல. ஓராண்டுக்கும் மேலான கடினமான முயற்சியின் விளைவாக "மெய்ம்மொழிப் பொருள் விளக்கம்' என்ற இந்நூலை செம்மையாக வெளிக்கொணர்ந்த உரையாசிரியரின் செயல் போற்றத்தக்கது.

செயற்கரிய செயல்களைச் செய்த பெரியோர்களின் வரலாற்றைப் பதிவு செய்து, மக்கள் சிந்தையுள் காணப்படும் ஆணவ இருளைப்போக்கி, வீடுபேற்றை அளிக்கவல்ல பெரிய புராணத்தின் இந்த உரைநூல் தமிழர்களுக்கும், சைவ அடியார்களுக்கும், பக்தி இலக்கியத்துக்கும் கிடைத்த பொக்கிஷம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.