தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உதகை மலர்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் அதிகரிப்பு!

மே 15-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.

News image

கோப்புப்படம்

Updated On :7 மே 2025, 8:04 am

உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி மே 15-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்துள்ளார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இதை அனுபவிப்பதற்காக உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலர்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உள்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, கோத்தகிரி நேரு பூங்காவில் 13-ஆவது காய்கறி கண்காட்சி மே 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி மே 10, 11, 12 ஆகிய தேதிகளிலும், கூடலூரில் 11-ஆவது வாசனை திரவியக் கண்காட்சி மே 9, 10, 11 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.

உதகை தாவரவியல் பூங்காவில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையில் நடைபெறும் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்காக மே 15-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும், குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 65-ஆவது பழக் கண்காட்சி மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

நடப்பு ஆண்டு முதல்முறையாக குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப் பயிர்கள் கண்காட்சி மே 30, 31 மற்றும் ஜூன் 1-ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி மே 15-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்துள்ளார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இதை அனுபவிப்பதற்காக உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலர்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உள்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, கோத்தகிரி நேரு பூங்காவில் 13-ஆவது காய்கறி கண்காட்சி மே 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி மே 10, 11, 12 ஆகிய தேதிகளிலும், கூடலூரில் 11-ஆவது வாசனை திரவியக் கண்காட்சி மே 9, 10, 11 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.

உதகை தாவரவியல் பூங்காவில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையில் நடைபெறும் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்காக மே 15-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும், குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 65-ஆவது பழக் கண்காட்சி மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

நடப்பு ஆண்டு முதல்முறையாக குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப் பயிர்கள் கண்காட்சி மே 30, 31 மற்றும் ஜூன் 1-ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.