தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காவ்யா சண்முகசுந்தரத்தின் பண்பாட்டுத் தடம்

ஐந்து தலைப்புகளில், 25 கட்டுரைகள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :12 ஜனவரி 2026, 11:07 am

தினமணி செய்திச் சேவை

காவ்யா சண்முகசுந்தரத்தின் பண்பாட்டுத் தடம்- (தொகுப்பும் பதிப்பும்); பழனி.கிருஷ்ணசாமி, பக்.300; ரூ.320; காவ்யா, சென்னை-600 024; ✆98404 80232.

பொள்ளாச்சியைப் பூர்விகமாகக் கொண்ட நூலாசிரியர், பெங்களூரில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நுண்கலைகளில் சிறந்து விளங்கும் இவர், தமிழர் பண்பாட்டு ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

தமிழ் இலக்கியக் கூறுகள், பண்பாட்டியல் மீது அதீத அக்கறை கொண்ட 'காவ்யா' சண்முகசுந்தரத்தின் முயற்சியால், முத்தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து அரும்பணியாற்றி, 'தமிழ் சித்தர்' என்ற அடைமொழியைத் தாங்கியிருக்கிறார். அவருடைய குணநலன்கள், தமிழ்ப் பற்றுதல், இலக்கிய ஆளுமை என்று பன்முகத் தன்மையை இந்த நூல் அலசுகிறது.

'ஓர் ஆளுமையாக உருவாகி', 'நாட்டுப்புறவியல் பாதையில்...', 'புனைவிலக்கியச் சாலையில்...', 'இசைத் தமிழோடும், நாடகத் தமிழோடும் கைகோத்து', 'பேசியபடி ஒரு நடை...' என ஐந்து தலைப்புகளில், 25 கட்டுரைகள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

கவிஞர் வைரமுத்து, சுப்ரபாரதிமணியன், பாவண்ணன், ஆறு.ராமநாதன், தி.பெரியசாமி, சு.செல்வகுமரன், இரா.நரேந்திரகுமார், முத்துலட்சுமி சண்முகசுந்தரம், ஓ.முத்தையா, பழனி.கிருஷ்ணசாமி, பக்தவத்சல பாரதி, பா.சிங்காரவேலன், ஆ.திருநாகலிங்கம், பெ.சுப்பிரமணியன், பி.கண்ணன், த.பழமலய், க.பஞ்சாங்கம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகள் காவ்யா சண்முகசுந்தரம் குறித்து அலசுகின்றனர்.

சண்முகசுந்தரத்தின் கல்லூரிக் காலம், இலக்கியப் பணி, பன்முகத் திறமைகள், பன்முக அடையாளம், கவித்துவம், உழைப்பு, நாட்டுப்புறவியல் மீதான ஆர்வம், கதைச்சொல்லியாய் அவரது பங்களிப்பு, படைப்பாளுமை போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.