கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

வேளாண் சமூகக் கட்டமைப்பு

புனைகதை இலக்கியத்தில் இவ்விரு நாவல்களும் தனிச்சிறப்புடையவை என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

News image
Updated On :9 மார்ச் 2026, 7:23 am

தினமணி செய்திச் சேவை

வேளாண் சமூகக் கட்டமைப்பு (பெருந்திணை & விதைத்தவனும் விதைகளும்)- முனைவர் கு.சுதாகர்; பக்.120; ரூ.140; தென்புலம் பதிப்பகம், சென்னை-600 018; ✆ 98840 93737.

கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் நூலாசிரியர், இரு நாவல்களுக்கான ஒப்புமைகள், முரண்பாடுகள், சமூக மதிப்பீடுகள் போன்றவை குறித்து முழுமையாக ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார்.

வேளாண்மை குறித்து தஞ்சாவூரை மையமிட்டு எழுதப்பட்ட சோலை சுந்தரபெருமாளின் 'பெருந்திணை' நாவலையும், திருவண்ணாமலையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ப.முருகனின் 'பெருந்திணை' நாவலையும் ஒப்பிட்டு ஆய்வு நோக்கில் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.

இவ்விரு படைப்பாளர்களின் அறிமுகம் தொடங்கி, நாவலின் தொடக்கப் பகுதி, மகப்பேறும் மரணமும், வட்டார வழக்கும் வாய்மொழிக் கூறுகளும், சிவன் கோயிலும் சில பதிவுகளும், பெண் குறித்த மதிப்பீடு, விளைச்சலும் மன உளைச்சலும், ஆறுமுகமும் ஆணைமுத்தும் (இரு நாவலின் கதாநாயகர்கள்), வேளாண் சமூக வாழ்வும் வலியும், படைப்பாளர் படைத்த வாசகங்கள் என்ற தலைப்புகளில் ஒப்பீடுகள் அமைந்துள்ளன.

ஒப்பீடு நூலிலேயே இரு நாவல்கள் குறித்த சுருக்கமும், பண்ணையாளர்களைக் குறித்தும், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வியல் முறைகள், காவிரி டெல்டா பகுதி விவசாயத்தையும் வட மாவட்ட விவசாயத்தையும் அறிய முடிகிறது. பண்ணையாளர் சமூகத்துக்கும் நிலத்தில் கூலிகளாக வாழ்வோருக்குமான போராட்டங்கள், எதிரெதிர் நிலைகளில் இருவேறு சமூகக் கட்டமைப்பில் வாழும் மக்களின் வாழ்வியலை இரு படைப்பாளர்களும் அவரவர் பார்வையில் இருந்து வெளிப்படுத்தியிருப்பதன் வாயிலாக உணர முடிகிறது.

புனைகதை இலக்கியத்தில் இவ்விரு நாவல்களும் தனிச்சிறப்புடையவை என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.