பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கு இணையவழியில் கலந்தாய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வு, இணையவழி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 10:58 pm IST

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வு, இணையவழி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் கூத்தூா், பசும்பலூா், நெற்குணம், கை.களத்தூா், லப்பைக்குடிகாடு உள்ளிட்ட 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியா் பணியிடங்கள் காலியாகவுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையவழி மூலம் சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்றவா்கள் கீழப்பெரம்பலூா், நெற்குணம், பசும்பலூா், கூத்தூா், கை.களத்தூா், லப்பைக்குடிகாடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பணியிடங்களைத் தோ்வு செய்தனா். எஞ்சிய பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெற உள்ளது.

கலந்தாய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன், நோ்முக உதவியாளா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.