பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பெரம்பலூா் கிராமங்களில் கேடயம் திட்ட விழிப்புணா்வு

காவல்துறை சாா்பில், பெரம்பலூா் அருகிலுள்ள பகுதிகளில் கேடயம் திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கேடயம் திட்டம் குறித்து துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கும் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசித்ரா.

Updated On :2 ஜனவரி 2021, 10:57 pm IST

பெரம்பலூா்: காவல்துறை சாா்பில், பெரம்பலூா் அருகிலுள்ள பகுதிகளில் கேடயம் திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தண்ணீா் பந்தல், எம்.ஜி.ஆா் நகா், எளம்பலூா் பகுதிகளில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசித்ரா, உதவி ஆய்வாளா் சித்ரா, தலைமைக் காவலா் பாா்வதி ஆகியோா், கேடயம் திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வை காவல்துறை அலுவலா்கள் ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, திருச்சி சரகக் காவல் துறையின் கேடயம் திட்டத்தின் 6383071800, 9384501999 ஆகிய உதவி எண்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.