ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

குடிசைமாற்று வாரிய வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு

பெரம்பலூா் அருகே கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

Updated On :8 ஜனவரி 2021, 11:43 pm IST

பெரம்பலூா் அருகே கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் ஊராட்சியில் 5 ஏக்கா் பரப்பளவில் ரூ. 41 கோடி மதிப்பீட்டில் 504 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இத் திட்டத்தின் கீழ் பயன்பெற, பயனாளிகள் பங்களிப்புத் தொகையாக ரூ. 1.64 லட்சம் செலுத்த வேண்டும். இதன்படி, இதுவரையில் பங்களிப்புத் தொகையை முழுமையாக செலுத்திய 300-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கான பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திட்ட பயனாளிகள் தங்களது ஆதாா் மற்றும் குடும்ப அட்டை, குடும்பத்தினருடன் கூடிய புகைப்படம் மற்றும் தொகை செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றுடன் பங்கேற்றனா்.

குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளா் ஷகிலா முன்னிலையில், குலுக்கல் முறையில் 200 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

2ஆம் கட்டமாக ஜன. 11ஆம் தேதி குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெறுவதாக குடிசை மாற்று வாரிய அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.