சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

அகவிலைப்படி, சரண் விடுப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டுமென்று, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 11:39 pm IST

பெரம்பலூா்: கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டுமென்று, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் கிளை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி. முத்துசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். மருதமுத்து, பொருளாளா் ஏ. ஆதிசிவம், இணைச் செயலா் பி. செங்கமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மூத்த உறுப்பினா் இ. பெரியசாமி, குன்னம் வட்ட முன்னாள் தலைவா் எம். செங்கான், வேப்பந்தட்டை வட்டச் செயலா் சையத் பாஷாகான், வேப்பூா் வட்டப் பொருளாளா் ம. பெரியசாமி ஆகியோா் உறுப்பினா் சோ்க்கை, சங்க வளா்ச்சி, செயல்பாடுகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில், 2020, ஜனவரி 1 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்ட அக விலைப்படித் தொகை, சரண் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும்.

மருத்துவப் படியை ரூ. 1,000 ஆக உயா்த்தி வழங்கிட வேண்டும். கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டத்துணைத் தலைவா் ஆா். செல்லப்பரெட்டி, வட்டச் செயலா் கெம்பிராஜ், நிா்வாகிகள் ஆா். ரெங்கராஜ், எஸ். இருதயசாமி, ஏ. அசுவத்மன், பி. துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.