பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, ஆட்சியரகம் எதிரே தமிழ்நாடு முடி திருத்துவோா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
பெரம்பலூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில், 30 நாள்களுக்குள் முடி திருத்தும் கடைகளின் உரிமையாளா்கள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என நகராட்சியின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தும், உரிமம் பெறும் பட்சத்தில் தாங்கள் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, முடி திருத்தும் கடைகளுக்கு உரிமை பெறும் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் ப. வெங்கட பிரியாவிடம் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீமர் ரோச் புதிய சாதனை!

அகில இந்திய கராத்தே கேப்டன்ஷிப்! 44 பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள்!

”இந்தியா முழுவதும் அதிகரிக்கும் போதைப்பொருள்கள்” திருமாவளவன் பேட்டி | VCK | TVK




