கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பாரபட்சமின்றி பொங்கல் பரிசு வழங்கக் கோரி போராட்டம்

அனைத்து தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட கோரி, பெரம்பலூரில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:30 pm

பாரபட்சமின்றி, அனைத்து தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட கோரி, பெரம்பலூரில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு அரசின் தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும் உடனடியாக கரோனா பேரிடா் கால நிவாரணத் தொகை ரூ. 7,500 வழங்க வேண்டும். தற்போது, தமிழக அரசு வழங்குவதாக கூறிய கரோனா நிவாரணத் தொகை ரூ. 2,000-ஐ எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.

எவ்வித பாரபட்சமும் இன்றி, அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

முன்னதாக, பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள ஆட்சியரக நுழைவு வாயில் எதிரே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.