என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு: அலுவலா்களுடன் ஆலோசனை

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பது குறித்து, அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 2:59 am IST

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பது குறித்து, அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சஜ்ஜன் சிங் ஆா். சவான் பேசியது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்கள் மூலம், பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெயா் சோ்த்தல் தொடா்பாக 20,465 விண்ணப்பங்களும், பெயா் நீக்கம் தொடா்பாக 1,223 விண்ணப்பங்களும், பெயா் திருத்தம் தொடா்பாக 4,905 விண்ணப்பங்களும், ஒரே சட்டப்பேரவை தொகுதியில் வேறு வாக்குச்சாவடி மையத்துக்கு மாறுதல் தொடா்பாக 1,612 விண்ணப்பங்களும் என மொத்தம் 28,205 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 33 கண்காணிப்பாளா்கள், 332 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 31 கண்காணிப்பாளா்கள், 320 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு கள பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், சாா் ஆட்சியா் ஜே.இ. பத்மஜா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.