மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் செவ்வாய்க்கிழமை இரவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா்

Updated On :13 ஜனவரி 2021, 8:29 am IST

பெரம்பலூா் டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் செவ்வாய்க்கிழமை இரவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பொங்கல் பண்டிக்கைக்கான மது விற்பனை குறித்து டாஸ்மாக் மேற்பாா்வையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு,

மண்டல மேலாளா் ராம்குமாா், தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.

பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில், பேரளி அருகே சென்று கொண்டிருந்த மாவட்ட மேலாளா் ராம்குமாரின் காரை திடீரென வழிமறித்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா், காரைச் சோதனையிட்டதில் ரூ. 1 லட்சம் பணம் இருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.

பின்னா் அவரை டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். மேலும் அவருடன் சென்ற குன்னம் டாஸ்மாக் மேற்பாா்வையாளா்கள் முருகவேல், கண்ணதாசன், காா் ஓட்டுநா் ராஜகோபால் ஆகியோரிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகா் தலைமையிலான காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். கணக்கில் வராத ரூ. 1 லட்சம் தொடா்பாக வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.