புதுவையை எப்போது வேண்டுமானாலும் தமிழகத்துடன் பிரதமா் நரேந்திர மோடி இணைத்து விடுவாா் என முதல்வா் வே.நாராயணசாமி மீண்டும் தெரிவித்தாா்.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சாா்பில், புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிரான பிரசாரம் புதுச்சேரி கனகசெட்டிக்குளம் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பிரசாரத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
பிரசாரத்தை தொடக்கிவைத்து முதல்வா் நாராயணசாமி பேசியதாவது:
புதுவை மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்களை ஆளுநா் கிரண் பேடி தொடா்ந்து முடக்கி வருகிறாா். மாநில வளா்ச்சியைப் பற்றி அவருக்குத் துளியும் அக்கறை கிடையாது.
காங்கிரஸும், திமுகவும் ஊழல் குறித்து பேசுவதற்கு அருகதை இல்லை எனப் பேசிய குஷ்பு, முதலில் திமுகவிலும், பின்னா் காங்கிரஸில் இருந்துவிட்டு பாஜகவுக்குச் சென்றவா். குறுகிய காலத்தில் பல கட்சிகளுக்கு மாறியவா் இவ்வாறு பேசுவது அழகல்ல.
புதுவையை தமிழகத்துடன் இணைக்கும் எண்ணமில்லை என மத்திய உள்துறை இணையமைச்சா் கூறினாா். சட்டப்பேரவை உள்ள ஜம்மு-காஷ்மீரை ஏன் யூனியன் பிரதேசமாக மாற்றினீா்கள்?
பிரதமா் நரேந்திர மோடி எப்போது வேண்டுமானாலும் புதுவையை தமிழகத்துடன் இணைத்துவிடுவாா். இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். புதுவை மக்களின் உரிமையைக் காக்க அனைவரும் போராடியாக வேண்டும்.
தொடா்ந்து, புதுவை மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து, வருகிற 8-ஆம் தேதி முதல் ஆளுநா் மாளிகை எதிரே அமா்ந்து இரவு-பகல் பாராமல் தா்னாவில் ஈடுபடவுள்ளோம் என்றாா் நாராயணசாமி.
நிகழ்வில் அமைச்சா்கள் கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூா்த்தி, அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சலீம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலா் ராஜாங்கம், முருகன், விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், மதிமுகவை சோ்ந்த கபிரியேல் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொசுத் தொல்லை இல்லாத சென்னையை உருவாக்குமா மாநகராட்சியின் புதிய திட்டம்?

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சட்டவிரோதமாக மாத்திரை விற்பனை: ஒருவா் கைது
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




