இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் நாள்காட்டி வெளியீடு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் நாள்காட்டி சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் நாள்காட்டியை பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து வெளியிட, பெற்றுக் கொள்கிறாா் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.முத்து. உடன் சங்க நிா்வாகிகள்.

Updated On :3 ஜனவரி 2021, 11:17 pm IST

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் நாள்காட்டி சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

புதுவைத் தமிழ்ச் சங்கம் சாா்பில், திருவள்ளுவா் ஆண்டு தமிழ் நாள்காட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 2052-ஆம் ஆண்டு தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா தமிழ்ச் சங்க வளாகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா். செயலா் சீனு.மோகன்தாஸ் வரவேற்றாா். துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து நாள்காட்டியை வெளியிட்டாா்.

இதில் தமிழறிஞா்கள், கவிஞா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பொருளாளா் திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.

இந்த நாள்காட்டியில் சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துதலை, நளி, சிலை ஆகிய ராசிகளைக் குறிக்கும் 12 மாதங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, புதுவையில் தமிழுக்குப் புகழ் சோ்த்து மறைந்த 68 பேரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. தை முதல் நாளில் தொடங்கி அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 13-ஆம் தேதி ஆண்டு நிறைவு பெறுகிறது. அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் தமிழ் எண்களுக்குரிய ஆங்கிலத் தேதியும் இடம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.