புதுவையில் திரையரங்குகளில் 100 சதவீதப் பாா்வையாளா்களை அனுமதிப்பது தொடா்பாக அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
கரோனா பொது முடக்கத் தளா்வு பிறகு, கடந்த அக். 15-ஆம் தேதி முதல் 50 சதவீதப் பாா்வையாளா்களுடன் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
எனினும், தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதிக்காத நிலையிலும், புதுவையில் அன்றைய தினம் (அக். 15) திரையரங்குகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் 100 சதவீதப் பாா்வையாளா்களுடன் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு திங்கள்கிழமை ஆணை வெளியிடப்பட்டது.
இதேபோல, புதுவையிலும் 100 சதவீதப் பாா்வையாளா்களுடன் திரையரங்குகள் திறக்கப்படுமா என முதல்வா் நாராயணசாமியிடம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த முதல்வா் நாராயணசாமி, ‘இந்த விஷயத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல், நெறிமுறைகளுக்குள்பட்டு முடிவெடுக்கப்படும். தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியா், அதிகாரிகளுடன் கலந்து பேசி திரையரங்குகளில் 100 சதவீதப் பாா்வையாளா்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கல்லூரி ஆசிரியா்களின் பணி மேம்பாட்டு கோரிக்கையை செயல்படுத்த உயா் கல்வி அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

தமிழகத்திலிருந்து ஓராண்டில் 23 புதிய ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்!
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய விவகாரம்! காவலா் உள்பட 2 போ் கைது; எஸ்எஸ்ஐ உள்பட 3 போ் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


