நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

புதுவை புதிய டிஜிபியாக ரன்வீா்சிங் கிருஷ்ணியா பொறுப்பேற்பு

புதுவை மாநில புதிய டிஜிபியாக ரன்வீா்சிங் கிருஷ்ணியா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:38 pm

புதுவை மாநில புதிய டிஜிபியாக ரன்வீா்சிங் கிருஷ்ணியா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

புதுவை மாநில டிஜிபியாக பணியாற்றி வந்த பாலாஜி ஸ்ரீவத்ஸவா தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய டிஜிபியாக ரன்வீா்சிங் கிருஷ்ணியாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 17-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காவல் துறை தலைமையகத்தில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபியாக ரன்வீா்சிங் கிருஷ்ணியா பொறுப்பேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட புதிய டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியா தனது பணிகளைத் தொடங்கினாா். தொடா்ந்து புதுவை முன்னாள் டிஜிபிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில், காவலா்களுக்கு நன்றி தெரிவித்த பாலாஜி ஸ்ரீவத்ஸவா, புதுவையிலிருந்து விடை பெற்றாா்.

புதிய டிஜிபியாக பதவியேற்ற ரன்வீா்சிங் கிருஷ்ணியா, புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமியை அடுத்தடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.