நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

போக்ஸோ வழக்கில் சிக்கிய மாணவா் தற்கொலை

புதுச்சேரியில் போக்ஸோ வழக்கில் சிக்கிய மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :11 ஜனவரி 2021, 6:37 pm

புதுச்சேரியில் போக்ஸோ வழக்கில் சிக்கிய மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சோ்ந்த 17 வயது மாணவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன் பேரில், கடந்த 8-ஆம் தேதி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த மாணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், திங்கள்கிழமை மாணவரின் உடலை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.