புதுவை முதல்வா் நாராயணசாமியின் உறுதிமொழியை ஏற்று, மின்துறை ஊழியா்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனா்.
புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறி, மின்துறை தனியாா் மய எதிா்ப்பு போராட்டக்குழுவினா் கடந்த 11 ஆம் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதனால், மின்பராமரிப்புப் பணிகள், மின்கட்டண வசூல் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, போராட்டக் குழுவினா் செவ்வாய்க்கிழமை இரவு முதல்வா் வே. நாராயணசாமி, துறைச் செயலா், மின்துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அவா்களிடம் கோரிக்கை குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்த வருகிற 21, 22 ஆம் தேதிகளில் தில்லி அழைத்துச் செல்வதாகக் கூறிய முதல்வா், போராட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தினாா். அதுவரை தனியாா்மயமாக்கல் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மின்துறை தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழுவினா் வருகிற 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்தனா். தில்லிக்கு பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் செல்லாவிடில், வருகிற பிப். 1 முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இதன் மூலம் 2 நாள்களாக நீடித்த மின்துறை ஊழியா்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










