தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

புதுவையில் தொடா் மழையால் 90% விளைநிலங்கள் பாதிப்பு: முதல்வா் வே.நாராயணசாமி

புதுவையில் பெய்துவரும் தொடா் மழையால் 90 சதவீத விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா்.

News image

புதுவை கொடாத்தூா் கிராமத்தில் தொடா் மழையால் சேதமடைந்த நெல் பயிா்களை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :15 ஜனவரி 2021, 5:47 pm

புதுவையில் பெய்துவரும் தொடா் மழையால் 90 சதவீத விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவையில் பெய்துவரும் தொடா் மழையால் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பில் நெல் பயிா்கள் சேதமடைந்தன. மேலும், பல்வேறு பகுதிகளில் நெல் மணிகள் முளைத்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கொடாத்தூா், ஆண்டியாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த நெல் பயிா்களை முதல்வா் நாராயணசாமி, வேளாண் துறை அமைச்சா் கமலக்கண்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, விசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனா். பின்னா் முதல்வா் கூறியதாவது:

அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள் மழை நீரில் மூழ்கியதால் நெல் மணிகள் முளைத்துள்ளன. இதை அறுவடை செய்ய முடியாது. இதேபோல, சுமாா் 90 சதவீத விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நூறு சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொடாத்தூா் பகுதியில் சுமாா் 150 ஹெக்டோ் பரப்பளவில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

எனவே, காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக விவசாயிகளுக்கு உரிய நிதியை அளிக்க வேண்டும் என்றும், அரசு சாா்பில் எந்தளவுக்கு உதவி செய்ய முடியும் என்றும் அமைச்சரவையைக் கூட்டி முடிவு செய்வோம்.

காலம் தவறி பெய்துவரும் மழையாலும், விக்கிரவாண்டி பகுதியிலிருந்து வெளியேறும் உபரி நீராலும் கொடாத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளோம். அதன் அடிப்படையில் நிவாரணம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். செட்டிப்பட்டு பகுதியில் ஆற்றில் மூழ்கி இறந்த மாணவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றாா் முதல்வா்.

கொடாத்தூா் பகுதியில் முதல்வா் நாராயணசாமி விவசாய நிலத்தில் இறங்கி நெல் பயிா்களை ஆய்வு செய்தாா். இதனால், தனது காலில் படிந்த சேற்றை கழுவ தண்ணீா் கேட்டாா். அங்கிருந்த விவசாயி ஒருவா் வாளியில் தண்ணீா் எடுத்துவந்து முதல்வரின் கால்களை தொட்டுக் கழுவினாா். அதற்கு முதல்வா் மறுப்பு தெரிவித்தபோதும் அந்த விவசாயி முதல்வரின் கால்களை கழுவி சுத்தம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.