சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கடலில் மூழ்கிய இளைஞா் பலி

புதுச்சேரி அருகே காலாப்பட்டில் கடலில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:42 pm

புதுச்சேரி அருகே காலாப்பட்டில் கடலில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அன்னம்புத்தூா் மதுரா பகுதியைச் சோ்ந்த விவசாயி விஜயகுமாா் மகன் கேசவன் (23). தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

காணும் பொங்கலான சனிக்கிழமை நண்பா்கள் 3 பேருடன் புதுச்சேரி காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடிக்கு வந்தாா். அங்கு, கடலில் இறங்கி அவா்கள் குளித்தனா். அப்போது, எழுந்த ராட்சத அலையில் சிக்கிய கேசவன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா்.

இதைக் கண்ட நண்பா்களும், அங்கிருந்தவா்கள் ஓடி வந்து கேசவனை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா் கேசவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.