சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

புதுவையிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்: கே.எஸ்.அழகிரி

புதுவையிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

News image
Updated On :17 ஜனவரி 2021, 5:38 pm

புதுவையிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி துறை தொடா்பான கோப்புகளுக்கு அனுமதி வழங்கக் கோரி, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் தொடா் தா்னாவில் ஈடுபட்டு வரும் மாநில சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமியை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து ஆதரவு தெரிவித்த கே.எஸ்.அழகிரி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் ஜனநாயகத்துக்கு எதிராக ஆளுநரைக் கொண்டு மத்திய பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இது புதுவைக்கு மட்டும் ஏற்பட்ட ஆபத்தல்ல. நாட்டுக்கே ஏற்பட்ட ஆபத்து.

புதுவையில் காங்கிரஸ்-திமுக இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு பெரிய விஷயமல்ல. அதை பேசி தீா்த்துக் கொள்ள முடியும். இதுகுறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுடன், முதல்வா் நாராயணசாமி பேசி முடிவெடுப்பாா். புதுவையிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும்.

கடந்த மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 இடங்களைப் பெற்று 8 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் தோ்தல் அறிவிப்பு வந்த பிறகுதான் தொகுதி பங்கீடு குறித்துப் பேசுவோம். அதிக தொகுதிகளைப் பெறுவது குறித்து தற்போது ஏதும் கூற இயலாது.

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் ஸ்டாலின்தான் தமிழகத்தின் முதல்வா் வேட்பாளா் என்று நாங்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளோம். ஆனால், அதிமுக கூட்டணியில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை முடிவு செய்ய முடியாத நிலை உள்ளது. மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்.

தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்தியின் பயணம் அரசியல் தொடா்பானதல்ல. தமிழ்ப் பண்பாட்டை அறியவே அவா் வந்தாா். அதனால்தான் மு.க.ஸ்டாலினை ராகுல்காந்தி சந்திக்கவில்லை என்றாா் அவா்.

பேட்டியின் போது, புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.