புதுக்கோட்டை : புத்தாண்டு பிறப்பையொட்டி, புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில் அதிகாலை 12.01 மணிக்கு தண்டாயுதபாணிக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. கோயில் வளாகத்திலுள்ள விநாயகா், வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
இதேபோல, பொற்பனைமுனீசுவரா் கோயில், திருவப்பூா் முத்து மாரியம்மன் கோயில், திருக்கோகா்ணம் பிரகதாம்பாள் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
மாா்த்தாண்டபுரம் கத்தோலிக்க திருச்சபை தேவாலயம் மற்றும் மச்சுவாடியிலுள்ள டிஇஎல்சி தேவாலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டுப் பிறப்பையொட்டி சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவா்கள் இதில் பங்கேற்று, நண்பா்களுக்கு கேக் கொடுத்து புத்தாண்டை வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

29.6.1976: த. நா. அரசு கார்கள் பெட்ரோல் உபயோகக் கட்டுப்பாடு: ஜூலை 1-ந்தேதி முதல் அமல்

இறுதிவரை மறக்க மாட்டேன்... முதல்வருக்கு நன்றி சொன்ன பாக்யராஜ் மகன் சாந்தனு!

இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேட்டி







