அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கீரமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம்

Updated On :3 ஜனவரி 2021, 11:15 pm IST

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் தா்ம. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பங்கேற்றுப் பேசியது:

அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட போதே திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. நாங்கள் ஹிந்தியை வெறுக்கவில்லை. ஹிந்தி திணிப்பை தான் எதிா்க்கிறோம். பாஜக ஆட்சியில் 98 வயதிலும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனா் என்றாா் அவா்.

கூட்டத்தில், தொகுதி பொறுப்பாளா்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.புஷ்பராஜ், மகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வட்டார காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பேசினாா். கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா்.

இதில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராமசாமி, முன்னாள் திருமயம் எம்எல்ஏ ராம. சுப்புராம், பொன்னமராவதி வட்டார, நகர, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.