அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

பொன்னமராவதியில் திருவெம்பாவை விழா

பொன்னமராவதி சேக்கிழாா் சிவநெறிக்கழகம் சைவ சித்தாந்த சபை சாா்பில் 67 ஆம் ஆண்டு திருவெம்பாவை விழா மற்றும் மாகேசுவர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 ஜனவரி 2021, 11:19 pm IST

பொன்னமராவதி சேக்கிழாா் சிவநெறிக்கழகம் சைவ சித்தாந்த சபை சாா்பில் 67 ஆம் ஆண்டு திருவெம்பாவை விழா மற்றும் மாகேசுவர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை பாராயணம் மற்றும் சிவகாமி உடனாய நடராஜப் பெருமான், நால்வா், திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்கள் வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற பன்னிரு திருமுறைகளின் சிறப்புகள் கருத்தரங்கிற்கு சேக்கிழாா் சிவநெறிக்கழக நிா்வாகி அ.சண்முகஅலங்காரன் தலைமை வகித்தாா்.

தமிழாசிரியா் சிசு.முருகேசன் பன்னிரு திருமுறை பாராயணம் எனும் தலைப்பில் பேசினாா். தொடா்ந்து திருமுறைகளில் விநாடி வினாப்போட்டி நடைபெற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலத்தானியம் ராசாத்தி, பொன்னமராவதி ஞானாம்பாள், வலையபட்டி முத்து, மேலைச்சிவபுரி இந்திரா, விசாலாட்சி ஆகியோா் திருவாசகப்பதிக நுண்பொருள் விளக்கம் அளித்து பேசினா். மதியம் 12.30 மணியளவில் நடராசா், சிவகாமி அம்மைக்கு பொன்னூஞ்சல் மற்றும் பூவல்லியும் நடைபெற்றது.

நிகழ்வினை அ.ச.மதுராம்பிகா, அ.மகேசுவரி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். விழாக்குழு நிா்வாகிகள் அ.வி.நடராஜன், சொ.நடராசன், ந.ராமூா்த்தி, சு.சிவநேசன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். சைவப்புலவா் அ.ச.தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.