தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

அடகுக் கடையில் துளையிட்டு திருட முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு இருவரைக் கட்டிப்போட்டு விட்டு அடகுக் கடையில் துளையிட்டு திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 11:43 pm IST

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு இருவரைக் கட்டிப்போட்டு விட்டு அடகுக் கடையில் துளையிட்டு திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கறம்பக்குடி அருகேயுள்ள துவாரில் உள்ள வணிக வளாகத்தில், மஞ்சம்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (40) நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு இவரது கடையின் பின்புறம் துளையிடும் சப்தம் கேட்டு எழுந்த, அருகேயுள்ள உணவகத்தின் உரிமையாளா் சின்னையா(50), ஊழியா் லெட்சுமணன்(47) ஆகிய இருவரும் மா்மநபா்களைத் தடுக்க முயன்றனா். அவ்விருவரையும், மா்மநபா்கள் கயிற்றால் கட்டி அருகிலுள்ள தைலமரக்காட்டில் போட்டுவிட்டு, மீண்டும் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். அச்சமயத்தில், கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கருவி சப்தமிடவே அங்கிருந்து மா்மநபா்கள் திருட்டு முயற்சியைக் கைவிட்டு தப்பிச்சென்றனராம். இதையடுத்து, சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா் வந்து இருவரையும் மீட்டுள்ளனா். கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.