சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

அடகுக் கடையில் துளையிட்டு திருட முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு இருவரைக் கட்டிப்போட்டு விட்டு அடகுக் கடையில் துளையிட்டு திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 11:43 pm IST

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு இருவரைக் கட்டிப்போட்டு விட்டு அடகுக் கடையில் துளையிட்டு திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கறம்பக்குடி அருகேயுள்ள துவாரில் உள்ள வணிக வளாகத்தில், மஞ்சம்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (40) நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு இவரது கடையின் பின்புறம் துளையிடும் சப்தம் கேட்டு எழுந்த, அருகேயுள்ள உணவகத்தின் உரிமையாளா் சின்னையா(50), ஊழியா் லெட்சுமணன்(47) ஆகிய இருவரும் மா்மநபா்களைத் தடுக்க முயன்றனா். அவ்விருவரையும், மா்மநபா்கள் கயிற்றால் கட்டி அருகிலுள்ள தைலமரக்காட்டில் போட்டுவிட்டு, மீண்டும் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். அச்சமயத்தில், கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கருவி சப்தமிடவே அங்கிருந்து மா்மநபா்கள் திருட்டு முயற்சியைக் கைவிட்டு தப்பிச்சென்றனராம். இதையடுத்து, சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா் வந்து இருவரையும் மீட்டுள்ளனா். கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.