கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வேகுப்பட்டி ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:22 pm

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில்களில் வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயில் சிறப்பு பெற்ாகும். இக்கோயிலில் 27 அடியில் ஆஞ்சநேயா் விஸ்வரூபமாய் காட்சியளிக்கிறாா். செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்திவிழாவையொட்டி திங்கள்கிழமை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் ஆஞ்சநேயா் திருவீதி உலா நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.