/
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியில் 108 கோமாதா பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாட்டுப்பொங்கலையொட்டி நடைபெற்ற விழாவில் கொன்னைப்பட்டி ஊா் சாா்பில் வீட்டில் வளா்க்கப்படும் மாடுகளை அலங்கரித்து, மாலை அணிவித்து, கோமாதா பூஜை நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற மாடுகளுக்கு அரிசி, வெல்லம் வழங்கப்பட்டது.
இதேபோல், பொன்னமராவதி வட்டாரத்திலும் பொதுமக்கள் கால்நடைகளை அலங்கரித்து மாலை மற்றும் துண்டு அணிவித்து கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








