/

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டுஒத்திவைப்பு

ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக விழாக்குழுவினா் தெரிவித்துள்ளனா்.

Updated On :15 ஜனவரி 2021, 6:19 pm

ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக விழாக்குழுவினா் தெரிவித்துள்ளனா்.

ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டுக்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்பகுதியில் சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஜல்லிக்கட்டு போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக விழா குழுவினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.