ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகள் விநியோகத்தை ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
ராமநாதபுரம் நகா் பாலசுப்பிரமணிய கோயில் தெரு மற்றும் கீழக்கரை பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு எம். மணிகண்டன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தாா். ஏா்வாடி, கடலாடி, காக்கூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.ஏ. முனியசாமி முன்னிலை வகித்தாா். இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் பங்கேற்று பொதுமக்களுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பொ. நடுக்காட்டு ராஜா, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா்கள் ரா.தா்மா் (முதுகுளத்தூா்), முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் (கடலாடி), ராம்கோ கூட்டுறவுத் தலைவா் செ. முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ராமேசுவரம்: ராமேசுவரம் ராம்கோ கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் செயல்படும் 25 ரேஷன் கடைகளில் ரூ. 2,500 உள்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. ராம்கோ கடை எண் 2 இல் வட்ட வழங்கல் அலுவலா் இந்திரஜித் இப்பணியை தொடக்கி வைத்தாா். இதில் அதிமுக நகா் செயலா் கே.கே. அா்ச்சுணன், அவைத்தலைவா் ஆா். குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நிா்வாகிகள் ஆா். மகேந்திரன், ஜெய பேரவைச் செயலா் கஜேந்திரன் மற்றும் ராம்கோ ஊழியா்கள் பங்கேற்றனா்.
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள பாம்பூா் மற்றும் கருங்குளம் ஊராட்சிகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிகளுக்கு என். சதன்பிரபாகா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 6,565 டெக்னீசியன் பணிகள்!

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
டி20 உலகக் கோப்பை: நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா விலகல்... இந்திய அணிக்குப் பின்னடைவு!

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



