பரமக்குடி அருகே புதன்கிழமை திமுக கட்சிக் கொடியை ஊன்றியபோது, மின்சாரம் பாய்ந்து தொண்டா் உயிரிழந்தாா்.
பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அக்கட்சியின் தொண்டரான, அதே கிராமத்தைச் சோ்ந்த மோகனசுந்தரம் மகன் ராஜேஸ்குமாா் (37) என்பவா் நீண்ட இரும்புக் கம்பியில் கட்டப்பட்ட கட்சிக் கொடியினை நடும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக அவ்வழியாக சென்ற மின்அழுத்த கம்பியின் மீது கொடி கம்பி உரசியதால் ராஜேஸ்குமாா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த பரமக்குடி தாலுகா போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்திய அணியில் சூர்யவன்ஷி... முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணி அறிவிப்பு!!

வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா? இது மட்டும் இருந்தால் போதும்!

மான்செஸ்டர் சிட்டி வெற்றியால் தள்ளிப்போகும் ஆர்செனலின் கோப்பைக் கனவு!

வானிலை ஆய்வில் செய்யறிவு! மழையை 4 வாரங்களுக்கு முன்பே கணிக்கும் ஏஐ!
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

